
இன் நிலையில் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களின் பாஸ்போட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரனிடம் விசாரணை நடத்தவேண்டும் எனவும், அவரை விமானத்தை விட்டு கிழே இறங்கி வருமாறும் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள். இச்சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது என சக பயணிகளில் ஒருவர் கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். தம்மை புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளம் காட்டிய நபர்களே சுபாஷ்கரனை விமானத்தில் இருந்து இறங்கி உள்ளே கொண்டுசென்றுள்ளார்கள் என்றும் அப்பயணி மேலும் தெரிவித்துள்ளார்.
30 க்கும் மேற்பட்ட கத்தி திரைப்பட குழுவினர் அந்த விமானத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் எவ்வளவோ தடுக்க முற்பட்டும் அவர்களால் எதனையும் செய்யமுடியவில்லை என்று விமானத்தில் உள்ள பயணி மேலும் தெரிவித்துள்ளார். மாலைதீவில் இருந்து கொழும்பு சென்ற விமானத்தில் லண்டன் பயணிக்க பலர் இருந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு மாற்று விமானசேவையாகும்(TRANSIT FLIGHT). பயணிகள் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தினுள் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் விமானத்தினுள் தங்கியிருக்க, கொழும்பில் இருந்து லண்டன் செல்லும் பயணிகளை அது ஏற்றிக்கொண்டு, லண்டனுக்கு புறப்படும் விமானம் ஆகும். இன் நிலையில் சுபாஷ்கரன் கைதுசெய்யபப்ட்டது ஏன் என்று தெரியாத நிலை காணப்படுகிறது. இச்செய்தியை கொழும்பில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உறுதிசெய்யமுடியாத நிலையும் காணப்படுகிறது.
இருப்பினும் இன்றைய தினம் கொழும்பில் இருந்து லண்டன் செல்லவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர் வேஸ் விமானம் UL 503 சுமார் 1 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது