பக்கங்கள்

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் மேர்வின் சில்வா

களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  


 தற்காலிக அடிப்படையில் தாம் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.   களனி தொகுதியின் அமைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சாலித விஜேசூரிய கடமையாற்றுவார் என அவர் அறிவித்துள்ளார். 

 கிரிபத்கொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.   இந்த முறை ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக எந்தவொரு மேடையிலும் ஏறப்போவதில்லை. எனினும் தேர்தல் பிரசாரப் பணிகளை சிசிர ஜயகொடி மற்றும் பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரணவீர ஆகியோருடன் இணைந்து செயற்படுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தம்மிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.   

எனினும், இந்தக் கோரிக்கையை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனால் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.