பக்கங்கள்

பொது எதிரணியிடம் தமிழ் வாக்காளர்கள் கேட்கக்கூடிய கேள்விகள்


ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின் தமிழ் மக்களுக்கு அரசாங்கம்
எதைத் தரக்கூடும் என்பதற்கு கடந்த பத்தாண்டு கால அனுபவமே போதும். அதே சமயம் பொது எதிரணியிடமிருந்து என்ன கிடைக்கும்? அங்கேயும் எதிர்க்கட்சிகள் மத்தியில் துலங்கிக் கொண்டு தெரியும் ஆளுமைகளைப் பற்றி தமிழ் மக்களுக்கு ஏற்கனவே படிப்பினைகள் உண்டு.
எனினும் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் எதிர்க்கட்சிகளால் விடுக்கப்படும் அறிக்கைகள் ஊடக சந்திப்புக்களில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர்கள் முன்வைக்கும் கோஷங்கள் என்பவற்றை தொகுத்துப் பார்க்கும் போது இலங்கைத் தீவின் கடந்த பத்தாண்டுகால நடைமுறையில் ஏதோ பெரிய தலைகீழ் திருப்பத்தை  கொண்டு வரப்போவதான ஒரு தோற்றம் காட்டப்படுகிறது.
இத்தோற்றத்தின் மீது கேள்விகளை எழுப்புவதே இக்கட்டூரையின் நோக்கமாகும்.
கேள்வி 1 – இனப்பிரச்சினைக்கான அவர்களுடைய தீர்வு என்ன?
இது தொடர்பாக இதுவரையிலும் அவர்கள் எதையும் துலக்கமாக கூறியிருக்கவில்லை. கூட்டமைப்பின் தலைமைப்பீடத்துடனான சந்திப்புக்களின் போது சந்திரிக்காக 13பிளஸ்ஸைப் பற்றி உடிப் போக மாட்டார்கள் என்ற ஓர் அபிப்பிராயம் அரசியல் விளக்கமுடைய தமிழ் மக்கள் மத்ரையாடியதாக ஒரு தகவல் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்கனவே அப்படித் தான் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர்கள் 13ஆவது திருத்தத்தை அல்லது அதின் பிளஸ்களை தாண்தியில் பரவலாக காணப்படுகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரைக்கும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது என்று கூறுவோரும் உண்டு. சில சமயம் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அவர்களால் தமிழ் மக்களை கவரக் கூடிய வாக்குறுதிகளை வழங்க முடியாதிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 
யார் ஆகப்பெரிய இனவாதி அல்லது யார் சிங்கள மக்களின் உண்மையான பாதுகாவலன் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு பிரச்சார களமாகவே ஜனாதிபதித் தேர்தல் களம் அமையப்போகிறது. எனவே எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விட கூடுதலாக எதையாவது வழங்கினால் அது அவர்களுடைய வாக்கு வங்கியை பாதிக்கும். இது காரணமாக தேர்தல் முடியும் வரையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்து பகிரங்கமாக விவாதிப்பதை அவர்கள் தவிர்;க்க விரும்புவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
சந்திரிக்கா ஏற்னவே அவருடைய ஆட்சிக் காலத்தில் ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்திருக்கிறார். அது 13 ஆவது திருத்தத்ததை தாண்டிச் செல்வதான ஒரு தோற்றத்தை கொண்டிருந்தது. அப்பொழுது அத்தீர்வுப் பொறியை எதிர்த்த ரணில் அதன் பிரதியை நாடாளுமன்றத்தில் வைத்துக் கொழுத்தினார். ஆனால் பின்னாட்களில் ரணில், விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கையானது இலங்கைத் தீவில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டிருந்தது. அப்பொழுது சந்திரிக்கா அந்த உடன்படிக்கைக்கு இடைஞ்சலாக இருந்தார்.
எதிர்க்கட்சிகளாக இருக்கும் போது அரசாங்கம் செய்யும் எல்லாவற்றையுமே எதிர்ப்பது என்ற ஒரு குருட்டுப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அவர்கள் அத்தீர்வுகளை எதிர்த்திருந்தாலும் கூட இப்பொழுது அவர்கள் இருவரும் இணைந்து செயற்படுகிறார்கள். வரப்போகும் தீர்வு அவர்கள் ஏற்கனவே முன்வைத்த தீர்வுகளின் கலவையாக அமையக் கூடும் என்ற ஓர் எதிர்பார்;ப்பும் தமிழர்களின் ஓர் பகுதியினரிடம் உண்டு.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு தீர்வைக் குறித்து தேர்தல் களத்தில் உரையாடுவது என்பது பொது எதிரணியின் வெற்றி வாய்ப்பை தகர்த்து விடும் என்பதால் தேர்தல் முடியும் வரையும் அதை ஒரு ஒத்தி வைக்கப்பட்ட இரகசிய நிகழ்ச்சி நிரலாக அவர்கள் பேணி வருகிறார்கள் என்று கூறுவோரும் உண்டு.
இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைமைக்கு சில நம்பிக்கைகள் ஊட்டப்பட்டதாகவும் கடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவோடு கூட்டமைப்பானது ஒரு கனவான் உடன்படிக்கைக்கு வந்தது போல இம்முறையும் ஒரு கனவான் உடன்படிக்கைக்கு வரக்கூடும் என்றும் ஓர் அபிப்பிராயமும் உண்டு.
மேற்கு நாடுகள் தலையிட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட எல்லா களங்களிலும் ஒப்பீட்டளவில் பரவாயில்லாத தீர்வுகளே முன்வைக்கப்பட்டிருக்கிறன என்பதை சுட்டிக்காட்டும் ஒரு பகுதி விமர்சகர்கள். இங்கேயும் எதிர்கட்சிகளின் கூட்டணியானது மேற்கு நாடுகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றிருப்பதால் அவர்கள் கொண்டு வரக்கூடிய எந்தவொரு தீர்வும் ஒப்பீட்டளவில் இப்போதிருப்பவற்றை விட பெரியதாகவே இருக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தால் அவர் வளைக்கப்பட முடியாத ஒரு எதிரியாக இருப்பார் என்றும். எனவே வளைக்கப்பட முடியாத எதிரியை உலக சமூகம் முறிக்க முற்படுகையில் அதில் தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகம் நன்மை கிடைக்கும் என்றும் வாதிடும் தரப்பினர் மேற்சொன்ன விளக்கங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மைத்திரிபால சிறிசேனவை நோக்கி மேலும் கேள்விகளை கேட்கிறார்கள். 

கேள்வி 2 – போர்க்குற்றம் தொடர்பில் பொது எதிரணியின் முடிவு என்ன?
சஜித் பிரேமதாஸ போன்றவர்கள் கூறியவற்றையே ஒரு பொது நிலைப்பாடாக எடுத்துக் கொண்டால் பொது எதிரணி தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும் நீதி எது? போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படுவதிலிருந்தே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடங்குகிறது என்பதை பொது எதிரணி ஏற்றுக்கொள்கிறதா?
கேள்வி 3 – மைத்திரிபால சிறிசேனவின் இறந்த காலத்தை தொகுத்துப் பார்த்தால் சிங்கள மக்கள் அவர் மீது ஏதும் நம்பிக்கையை வைக்கக் கூடும். ஆனால் தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கத்தக்க ஒரு முன்னுதாரணம் மிக்க இறந்த காலத்தை அவர் கொண்டிருக்கவில்லை. அவர் ஆற்றிய உரைகள் அவர் வழங்கிய பேட்டிகள் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பில் அவர் இதுவரையிலும் எடுத்து வந்த நிலைப்பாடுகள் என்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அவர் தென்னிலங்கை அரசியலில் பொதுப் போக்காக காணப்படும் இனவாத தடத்திலிருந்து என்றைக்குமே விலகி நின்றதில்லை. அத்தகைய ஓர் இறந்த காலத்தைப் பெற்ற ஒருவர் வருங்காலத்தில் தலைகீழாக மாறுவார் என்று எப்படி நம்புவது?
கேள்வி 4 – கட்சிக்குள் ராஜபக்ஷ சகோதரர்;களின் ஆதிக்கம் காரணமாக தனக்கு உரிய இடம் தரப்படவில்லை என்பதற்காகவே அவர் கலகக்காரராக மாறினார். இப்போது தனது கலகத்திற்கு பொன்முலாம் பூசுவதற்காக ஜனநாயக மீட்பு, ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, போன்ற கவர்ச்சியான கோஷங்களை முன்வைக்கிறார். அதாவது அவர் தனது தனிப்பட்ட பிரச்சினையை ஒரு பொதுப் பிரச்சினையாக மாற்றி இலாபம் தேட முற்படுகிறார். அதாவது அவர் ஒரு இலட்சியவாதியல்ல. அவர் தன்னைத் தானே பிரகடனம் செய்து கொள்வது போல மகாத்மா காந்தியோடு அல்லது மண்டேலாவோடு ஒப்பிடத்தக்க ஒரு தலைவராக  வருவார் என்று தமிழ் மக்கள் நம்பத்தக்க ஓர் இறந்த காலம் அவருக்கில்லை. அப்படிப்பட்ட ஒருவரை எப்படி நம்புவது?
கேள்வி 5 – மேற்கு நாடுகளின் அனுசரணையோடு அல்லது மேற்கு நாடுகளின் ஆசிர்வாதத்தோடு தீர்வுகள் முன்வைக்கப்படும் எல்லா இடங்களிலும் முதலில் ஏதோ ஓர் வகைப்பட்ட அசுவாசமான  ஒரு சூழலை அல்லது ஒப்பீட்டளவில் இறுக்கம் தளர்ந்த ஒரு சூழலை உருவாக்குவதை மேற்கு நாடுகள் ஓர் உத்தியாக மேற்கொண்டு வருகின்றன.
இப்படியொரு இறுக்கம் தளர்ந்த நிலை உருவாகும் போது இறுக்கப்பிடிக்குள் இருந்த மக்களுக்கு அது ஒரு பெரிய வரம் போல் இருக்கும். ஆனால் இறுதித் தீர்வொன்று வரும் போது அந்த வரமே சாபமாக மாறும். அதாவது இறுக்கம் இல்லாத அல்லது அசுவாசமான ஒரு வாழ்க்கையே போதும் என்ற ஓர் மனோ நிலை படிப்படியாக உருவாக்கப்பட்டு விடும்;. இதைத்தான் தமிழ் விமர்சகர்களில் ஒரு பகுதியினர் தர்மர் பொறி என்று அழைக்கிறார்கள். அண்மையில் இக்கட்டூரை ஆசிரியரோடு ஆட்சி மாற்றம் தொடர்பாக கதைத்த போது ஒரு மூத்த நாடக செயற்பாட்டாளர் கேட்டார் 'ரிலாக்ஸான' ஓர் அரசியல் சூழல் தானா தமிழ் மக்களுக்குரிய இறுதித் தீர்வு? என்று. இதுவொரு முக்கியமான கேள்வி. தமிழ் மக்களைப் பொறுத்த வரை ஆட்சி மாற்றம் என்று ஒன்று நிகழ்ந்தால் ஆட்சி மாற்றத்தின் உடனடி விளைவு இது தான். ஆனால் இதுவே இறுதித் தீர்வா இல்லையா என்பதை தீர்மானிக்கப்பபோவது சிங்கள பொளத்த மனோநிலையில் ஏற்படவேண்டிய மனமாற்றமே. அப்படியொரு மனமாற்றம் எதிர்;க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறதா?  இது ஐந்தாவது கேள்வி.
இனி ஆறாவது கேள்வி, ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே எவ்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று காட்டப்படுகிறது. அது ஒரு பகுதி உண்மை மட்டுமே. எனது கடந்த வார கட்டூரையில் கூறப்பட்டுள்ளது போல இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பே ஒரு பிரச்சினை தான். ஏற்கனவே விமர்சகர்கள் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இனஒடுக்குமுறையின் சட்டக் கருவியாகவே அரசியல் அமைப்பு இருந்து வந்துள்ளது. இனஒடுக்கு முறையின் தொடர் வளர்ச்சியாகவே அரசியல் அமைப்பானது பல்வகைமைக்கும், பல்லினத் தன்மைக்கும் எதிராக நெகிழ்ச்சியற்றதாகவும் மூடுண்டதாகவும் உருவாகியது.
தனது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜயவர்தன திகதியிடப்படாத இராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்திருந்தார். இப்போதிருக்கும் அரசியல் தலைவரோ அதிருப்தியாளர்களின் குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்ட கோப்புக்கள் (பைல்கள்) தன்னிடம்  இருப்பதாக கூறி கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மிரட்டுகிறார்.
எனவே நாட்டுக்கு இப்போது தேவையாக இருப்பது ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மட்டுமல்ல அதைவிட பரந்தகன்ற தளத்தில் இலங்கைத் தீவின் அரசியல் அமைப்பே முற்றாக மீள வரையப்பட வேண்டும். அரசியல் அமைப்பை மாற்றுவது பற்றி சிந்திக்கப்படாத வரை இனப்பிரச்சினைக்கு தீர்வே கிடையாது. ஆயின், வெற்றி பெற்றால் சந்திரிக்காவோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ அரசியல் அமைப்பை மாற்றத் தயாரா?
இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது என்பது சிங்கள உயர் குழாம் மற்றும் படித்த நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சினை தான். சாதாரண சிங்கள மக்களுக்கு இவையெல்லாம் விளங்கப்போவதில்லை. அதைப் போலவே தமிழ் மக்கள் மத்தியிலும் இது போன்ற விவாதங்கள் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அரசியல் ஆர்வமுடைய, அரசியல் விளக்கமுடைய தரப்பினர் மத்தியில் தான் கவனிப்பைப் பெறும். வளைய மறுக்கும் எதிர்த்தரப்பு  முறிக்கப்படுவதால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றிய உரையாடல்களும்; அரசியல் விளக்கம் உடைய தரப்பினர் மத்தியில் தான் கவனிப்பைப் பெறும்.
மாறாக சாதாரண தமிழ் வாக்காளர்கள் இப்பொழுது இருப்பதை விட இறுக்கம் தளர்ந்த ஒரு வாழ்க்கைச் சூழலே பரவாயில்லை என்ற ஒரு முடிவுக்கு இலகுவாக தள்ளப்பட்டு விடுவார்கள். தமிழ் வாக்காளர்களை பொறுத்து பொது எதிரணிக்கிருக்கும் வாய்ப்பான ஓர் அம்சம் இது.
இத்தகையதொரு பின்னணியில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்;ந்தால் கிடைக்கக் கூடிய இறுக்கம் தளர்ந்த ஒரு சூழலை பொது எதிரணி ஒரு பொறியாக கையாளப் போவதில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? இது ஆறாவது கேள்வி.
ஏழாவது கேள்வி, கடந்த சுமார் அறுபதாண்டுகளுக்கும் மேலான தமிழ் அரசியலில் கனவான் உடனபடிக்கைகள் எவையுமே அவற்றுக்குரிய கண்ணியத்தோடு பேணப்பட்டதில்லை. அதிலும் குறிப்பாக சிங்கள தலைவர்களுடன் கள்ளக் காதலை வைத்துக் கொண்டு செய்யப்பட்ட கனவான் உடன்படிக்கைகள் அநேகமாக முறிக்கப்பட்டிருக்கின்றன. வரும் நாட்களில் கூட்டமைப்பிற்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையில் இப்படியொரு இரகசிய கனவான் உடன்படிக்கை செய்யப்படுமிடத்து அதற்கு மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு உத்தரவாதம் ஏதும் இருக்குமா?
எட்டாவது கேள்வி, தமிழ் மக்கள் தமது கடந்த அறுபதாண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற ஒரு  கோரிக்கை தற்பொழுது வலிமையுற்று வருகிறது. வாக்களிப்பின் போது தமிழ் மக்கள் தமது முதலாவது விருப்பத் தெரிவாக அப்பொது வேட்பாளரை தெரிவு செய்து விட்டு. இரண்டாவது விருப்பத் தெரிவை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து பேரம் பேசுவதற்குரிய ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என்றும் ஒரு பகுதி தமிழர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
இவ்வாறு தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏன் வருகிறது, எங்கிருந்து வருகிறது, என்பதைக் குறித்து பொது எதிரணி என்ன நினைக்கிறது? 
இது தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள சில அரசியற் செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் உயர் மட்டத்தோடு உரையாடியதாகவும், கூட்டமைப்பின் உயர்மட்டம் இத்தெரிவை இக்கட்டூரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் சாதகமாக பரிசீலிக்க தயாரில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.
இனி ஒன்பதாவது கேள்வி, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு பின்னணியில் அரங்கில் தமிழர்களின் எதிர்ப்புச் சக்தி மிகப் பலவீனமாக காணப்படும் ஒரு சூழலில்  கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனரீதியான அனைத்து வன் முறைகளுக்குமாக பொது எதிரணி தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாரா? அப்படி  மன்னிப்புக் கேட்பது என்பது நல்லிணக்கத்திற்கான மிகப் பிரதான முன்நிபந்தனைகளில் ஒன்று என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாரா?
கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கும் பொறுப்பான இருபெரும் கட்சிகளின் இணைப்பே பொது எதிரணி என்பதால் தமிழ் மக்களிடம் பொது மன்னிப்புக் கேட்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே அதிகம் உண்டு.
பத்தாவதும் இறுதியானதுமான கேள்வி, மேலே கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய விடையாக பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையுமா? அல்லது கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் சில தலைமுறைகளாக கேட்டுச் சலித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் வரிசையில் அதுவுமொரு புதிய இனிப்புப் பூசப்பட்ட இனவாத கொள்கை ஆவணமாக அமைந்து விடுமா?

மகிந்தவின் வக்கிரத்தை குறைக்கும் மருந்து மைத்திரியிடமே மோடி?


இலங்கை ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு
ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற உள்ளது. இத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக ராஜபக்ஷவின் சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மூத்த தலைவர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுகிறார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 13 ஆண்டுகாலம் பொதுச்செயலராக இருந்த மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஷ அரசின் மூத்த அமைச்சராகவும் இருந்தவர். 

தற்போது ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவுடன் பொதுவேட்பளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்படி ராஜபக்ஷவுக்கு எதிராக ராஜபக்ஷ கட்சியைச் சேர்ந்த ஒருவரே போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது ஜனாதிபதி தேர்தலை பரபரப்பாக்கி இருக்கிறது.  

அண்டை நாடான இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் போது, இந்தியப் பேரரசு தனது காய்நகர்த்தல்களை நிச்சயம் ஏதோ திரைமறைவில் செய்திருக்கும் என்பது அரசியலை குறிப்பாக இலங்கை நிகழ்வுகளை கவனித்து வரும் எவருக்கும் இயல்பாக தோன்றக் கூடியது. ஒருவேளை ரணில்  சந்திரிகாவை இணைத்து மைத்திரிபால சிறிசேனவை ராஜபக்ஷவுக்கு எதிரான ஒரு வலுவான வேட்பாளராக இந்தியாவே களமிறக்கியிருக்கலாமோ என்றெல்லாம் எண்ணத்தான் தோன்றும்.  

அதுவும் தமிழகத்தில் எவருமே எதிர்பாராத ஒரு குரல் அதுவும் தமிழ்த் தேசியவாதிகளிடம் இருந்து கூட வராத குரல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் "ஆஹா... இந்திய அரசு' வேலையை காட்டுகிறது என்றுதான் எண்ணத் தோன்றும். அந்த தமிழகக் குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமில்லை. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். அவர்தான் தாம் பதவியேற்ற நாள் முதல், இந்தியாவின் நன்மை கருதியும் தமிழர் நலன் கருதியும் ராஜபக்ஷவை கவிழ்த்துவிட்டு தமக்கு சாதகமான ஒருவரை ஜனாதிபதியாக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜபக்ஷவை "கவிழ்த்தாக'வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறவர்.  

இப்படியெல்லாம் முடிச்சுப் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு செய்தி யதேச்சையாக கண்ணில்தென்பட்டது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியத் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான திலிப் சின்ஹா வரும் 30 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார் என்பதுதான் அந்த செய்தி. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் சற்றே லேசான தீர்மானத்தைக் கூட மிகக் கடுமையாக நீர்த்துப் போகச் செய்யும் "அதிவல்லமை' படைத்த லாபியிஸ்ட். 

ஐ.நா. மனித உரிமை  சபையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது சாட்சாத் திலிப் சின்ஹா புண்ணியத்தால் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்து "இலங்கைக்கு துணை நிற்கும்' கொள்கையை உலகுக்கு பிரகடனம் செய்தது. இப்படி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகிறது.  

ஜனாதிபதித் தேர்தலில் கட்சியே உடைந்து ராஜபக்ஷ பலவீனமாக காட்சி தருகிறார். ராஜபக்ஷவுக்கு முண்டு கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருந்த திலிப் சின்ஹாவும் ஓய்வு பெறப் போகிறார் என ஒவ்வொன்றையும் இணைத்து, ஏதோ இலங்கையில் நடக்கப் போகிறது என்கிற ஆவல் அதிகரிக்கவே செய்கிறது. 

இந்த ஆவல்கள், ஆசைகள், இளங்கோவன்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் போட்டுடைத்துவிட்டிருக்கிறார் வலிமை மிக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி . ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவின் வரிகளில் சொல்வது எனில் "நெஞ்சிலே ஈட்டி பாய்ச்சி' விட்டிருக்கிறார் பிரதமர் மோடி.  ஆம் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டில் பேசுகையில், "இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாழ்த்துகள்' தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. 

இந்த வாழ்த்து நிச்சயமாக வலிந்து சொல்லாத ஒன்றுதான் என ஆறுதல் அடைவோம். ஏனெனில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சார்க் மாநாடு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டவர்களில் இருவர்தான் இப்போது உள்ளனர். ஒருவர் "மீண்டும் பிரதமராக தேர்வாகி வந்திருக்கிற வங்கதேசத்து ஷேக் ஹசீனா; மற்றொருவர் மீண்டும் தேர்தலை சந்தித்து வெல்ல இருக்கிற ராஜபக்ஷ' என்கிற அடிப்படையில் மோடி பேசினார். 

மேலோட்டமாக பார்க்கையில் போகிற போக்கில்தான் பிரதமர் மோடி பேசியதாக தோன்றலாம். ஆனால் இந்தியாவுக்கு பகிரங்க எதிரியாக காட்சி அளிக்கும் பாகிஸ்தானை விட மிக மோசமானதாக உருவெடுத்திருக்கும் இலங்கையின் நிகழ்வுகளை இந்தியா உணர்ந்திருக்குமேயானால் இப்படி இயல்பாகக் கூட வாழ்த்து தெரிவிக்கும் மனோநிலை "பாரத சர்க்காரின்' தலைமை அமைச்சருக்கு வந்திருக்குமா என்பதுதான் தெரியவில்லை.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை நாடாளுமன்றத்தில்"இந்தியா' ஆதரவாளராக முத்திரை குத்தப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பேசியது மிகவும் கவலைக்குரியது. இது குறித்து தமிழக அரசியல் தலைவர்களும் சரி, இந்திய கொள்கை வகுப்பாளர்களும் கொந்தளிக்காமல் துள்ளிக் குதிக்காமல் இருந்தது ஆச்சரியத்துக்குரியதுதான். அதற்கு உள்ளே செல்லும் முன் ஒரு சிறிய வரலாற்று பார்வை இந்த இடத்தில் நமக்கு அவசியமாகிறது.

"இலங்கையின் திருகோணமலை துறைமுகம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் தென்னாசியாவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்' என்ற வரலாற்று வாசகம்தான் அது. இது சோழர் காலத்துக்கும் பொருந்தியது. பின்னர் பிரித்தானியர்களுக்கும் பொருந்தியது. இந்திய பிரதமர் இந்திராவோ இதில் மிக உறுதியாகவே இருந்தார்.  

1980களில் அமெரிக்காவின் வொய்ஸ் ஆப் வானொலிக்கு திருகோணமலை பகுதியில் "தளம்'அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை மிகக் கடுமையாக எதிர்த்த இந்திரா அம்மையார், திருகோணமலையை இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒரு நாட்டுக்குக் கொடுக்கக் கூடாது என்று எச்சரித்திருந்தார். அவரது தவப்புதல்வன் ராஜிவ்காந்தி ஈழத் தமிழர் பிரச்சனையில் தவறுகள் இழைத்தவர்தான். 

இருப்பினும் 1987 இல் இந்தியா  இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய போது மறக்காமல் திருகோணமலை துறைமுகம் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் சரத்தையும் இணைத்தவர். 1990களுக்குப் பின்னர் இந்தியாவில் கூட்டணி அரசு ஏற்பட, வெளியுறவுக் கொள்கையானது அரசியல்வாதிகளின் கைகளில் இருந்து அதிகாரிகளுக்கு மாறிப் போனது. 

அத்துடன் திருகோணமலை மீதான மேலாதிக்கம் ஊசலாட்டம் காணத் தொடங்கியது. மெல்ல மெல்ல சீனா, இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்க கொஞ்சம் பதற்றத்துடன் திருகோணமலையை பற்றிக் கொண்டு தக்க வைக்க போராடியது இந்தியா.  விடுதலைப் புலிகள் ஆளுமைக் காலத்தில்கூட அனல் மின் நிலையம் அமைக்கப் போவதாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டு தமது"திருகோணமலை' கொள்கைக்கு உயிர்ப்பு கொடுத்து வந்தது இந்தியா. 

இந்த "திருகோணமலை'யின் இந்திய பிடிப்பை தளரச் செய்யும் வேலையைச் செய்து வருபவர் ராஜபக்ஷதான்! இலங்கை நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறார் ."திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்க்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துவிட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இது இந்தியா இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானது. 

சீனாவை முன்வைத்து இந்தியாவை இந்தத் தீவில் இல்லாது ஆக்குவது என்பது இலங்கைக்கு எதிரானதாகவே அமையும்' என்று எச்சரித்திருக்கிறார். இப்படி இந்தியா மீதும் ஈழத் தமிழர் மீதும் இரா. சம்பந்தன்களுக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்களுக்கும் இருக்கும் பதற்றத்தில் சிறிது கூட இந்திய மத்திய சர்க்காருக்கு இருக்காதா? அதனால்தான் ராஜபக்ஷ கட்சியை உடைத்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா நிறுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் எல்லோருக்கும் எழுந்தது. 

ஆனால் தற்போது "ராஜபக்ஷ' மீண்டும் ஜனாதிபதியாக வாழ்த்து தெரிவித்திருப்பதைப் பார்த்தால் என்னவென்று சொல்வது? இந்தியாவின் இராஜதந்திர "உள்ளடி வேலையாக இருக்குமோ? அல்லது வழக்கமாக சீனாவை மனதில் வைத்து இலங்கையிடம் "சரணாகதி' ஆன கதையா? என மீண்டும் மீண்டும் யோசிக்க வைப்பது தென்னாசியாவின் வல்லமை மிக்க இந்தியாவுக்கு நல்லது அல்ல. 

சீனாவை முன்வைத்து இந்தியாவை மிரட்டும் இலங்கையின் போக்குக்கு திட்டவட்டமான முடிவு கட்டும் கொள்கையை வகுக்க வேண்டியது இந்தியாவின் முன்னுள்ள பணி. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வலுவான இந்திய வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்டவும் தென்னாசிய பிராந்தியத்தின் வல்லரசு இந்தியாவே என்பதையும் நிலை நிறுத்தவும் உரிய வியூகம் வகுக்க வேண்டிய தருணம் இதுவே..!

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-14 (காணொளி)

மட்டக்களப்பில் வாழ்ந்துவந்த
யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாகவே மட்டக்களப்பை விட்டு வெளியேறவேண்டும் என்று கருணா தரப்பினர் உத்தரவு பிறப்பித்தார்கள்.

தமது உடமைகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, வெறும் 500 ரூபாய் பணத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு வட பகுதி வர்தகர்கள் வெளியேறவேண்டும். 24 மணிநேரத்திற்குள் அப்படி வெளியேறத்தவறுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணா தரப்பினர் கடுமையாக எச்சரித்தும் இருந்தார்கள்.
வடபகுதியைச் சேர்ந்த சுமார் 5000 பேர் வரையில் அன்றைய தினமே கிழக்கைவிட்டு வெளியேறிய அவலநிலை கிழக்கில் உருவானது.

யாழ் வர்தகர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேற்றப்பட்டதால் தமக்கு ஏற்பட்ட பிரதிகூலத்தை, தமக்கு ஒரு அனுகூலமாக மாற்றுவது எப்படி என்று வகை தேடினார்கள் விடுதலைப் புலிகள்.
யாழ் வர்த்தகர்கள் கருணா தரப்பினால் வெளியேற்றப்பட்தை தமக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் நகர்வுகளை மெது மெதுவாக மேற்கொள்ள ஆரம்பித்தார்கள் விடுதலைப் புலிகள்.
அந்த நடவடிக்கையில் அவர்கள் வெற்றியும் கண்டிருந்தார்கள்.


அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

முன்னைய பதிவுகள்


பலத்த பாதுகாப்பின் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்


அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்களால் சுடர் ஏற்றுவார்கள் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் மாணவர்கள், உத்தியோகத்தர்களை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்ற நிலையில். பத்துக்கு அதிகமான மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாவீரர் சுடரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தல்கள் மற்றும் அடாவடிகளுக்கும் மத்தியில் யாழ்.பல்கலைக் கழகத்தில் மாவீரர் நினைவாக ஈகை சுடர் ஏற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பல்கலைக்கழக செல்வநாயகம் மண்டபத்திற்கு முன்பாக குறித்த ஈகை சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. வெளியே வீதியிலும், பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் படை யினர் நிறைந்திருந்த நிலையில் எதுவும் இவ்வருடம் சாத்தியமில்லை. என நம்பப்பட்ட நிலையில் மாணவர்கள் குறித்த நிகழ்வை நடத்தியிருக்கின்றனர்.
இதனையடுத்து ஆத்திரமுற்ற நிலையில் படையினர் பல்கலைக்கழக சுற்றாடலில் நின்று கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.












லண்டனில் எழுச்சி பூர்வமாக நடை பெற்ற மாவீரர் நாள் 2014



லண்டனில் எக்சல் மண்டபத்தில் இவ்வாண்டு மாவீரர் நாள்  உணர்வு பூர்வமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. லண்டனில் வாழும் பல்லாயிரக் கணக்கான  புலம் பெயர் தமிழ் மக்களும் மாவீரர்களின் பெற்றோர்களும், மாவீரர்களின் சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டுக்காக உயிர் நீத்த மாவீரர்களை தம் நெஞ்சிலே நிறுத்தி தீபங்களை ஏற்றி தம் கண்ணீர் அஞ்சலிகளையும் செலுத்தினர்.லண்டனில் மட்டுமல்லாது உலகில் ஒவ்வொரு பகுதியில் வாழும் புலம் பெயர் தமிழ் மக்களும் மாவீரர் நாளை எழுச்சியுடன்  நினைவு கூர்ந்துள்ளனர்.
















மாவீரர் நாள் நிகழ்வுகள் -2014 உரைகள் மற்றும் அறிக்கைகள்


அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு அமெரிக்காவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
தமிழீழ தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மரபுரீதியான மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.




 தமிழீழ மாவீரர்நாள் அறிக்கை - 2014 - தமிழீழ விடுதலைப் புலிகள் 



1
1
1
1
1
1
1


மெல்பேர்ணில் நடைபெற்ற சிறப்புற நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!(படங்கள்)

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 – 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சரியாக மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட் டாளருமான திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் திரு. கிறிஸ்ரி அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனையடுத்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. முதல் மாவீரன் லெப்.சங்கரின் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரை திரு நவீன் அவர்களும், முதற்பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரை திருமதி நிர்மலா கதிர்காமத்தம்பி அவர்களும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து நூறு வரையான மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோரும் உரித்துடையோரும் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதன்பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்துகொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மக்கள் ஒன்றித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது.
மலர்வணக்கநிகழ்வின்போது தாயக துயிலுமில்லக்காட்சிகளை தாங்கிய காணொலிகளும், மாவீ­ரர் கவிதைகளின் பின்னுாட்டத்தில் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தாயக துயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களை நெஞ்சிலிருத்தி தமிழீழ விடுதலைக்காக அனைவரும் அயராது உழைப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாவீரர் நினைவான நடனத்தை நிருத்தக் சேத்திரா நடனப்பள்ளி மாணவர்கள் வழங்கினர். அதையடுத்து மாவீரர் நினைவுரை ஆங்கிலத்தில் இடம்பெற்றது. இந்நினைவுரையை திரு.சிந்துாரன் திலகராஜா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து நடனாலய நடனப்பள்ளி மாணவர்களின் மாவீரர் நினைவு நடனம் இடம்பெற்றது.
நினைவு நடனத்தைத் தொடர்ந்து மாவீரர் நினைவுரையை திரு. ஈசன் அவர்கள் நிகழ்த்தினார். மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மையப்படுத்தி அமைந்த அவ்வுரையில் குறிப்பிட்ட சில மாவீரர்களின் தியாகச் சம்பவங்களைத் தொட்டுக்காட்டிய ஈசன், போராட்ட வடிவங்கள் மாறினாலும் ஒன்று பட்ட சக்தியாகத் தொடர்ந்தும் பயணிப்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையுமென்ற கருத்தை முன்வைத்தார்.
இறுதி நிகழ்வாக நாட்டிய நாடகம் ஒன்று இடம்பெற்றது. மாவீரரின் உன்னதமான தியாகத்தை எடுத்தியம்பும் வகையில் அமையப்பெற்ற இந்நாட்டிய நாடகம் அழகான பின்னணி இசையுடனும் ஒளியமைப்புடனும் அரங்கில் நிகழ்த்தப்பட்டது. மாவீரர்களின் அர்ப்பணிப்பை அனைவர் முன்கொண்டுவந்த அக்கலைப்படைப்பில் எதிர்காலச்சந்ததிக்கும் எம்மவர் தியாகமகத்துவத்தை எடுத்துச்செல்வதாய் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரவு 9.00 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என உறுதியெடுத்துக்கொண்டு நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்ட காந்தள் என்ற மாவீரர்நினைவுகளை தாங்கிய இதழ் இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது. தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி காந்தள் இதழ் வெளியாகியிருந்தது.
நன்றி.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (விக்ரோரியா)
Mel-Maaveerar-Naal-2014 (08-2)
Mel-Maaveerar-Naal-2014 (01)
Mel-Maaveerar-Naal-2014 (02)
Mel-Maaveerar-Naal-2014 (03)
Mel-Maaveerar-Naal-2014 (04)
Mel-Maaveerar-Naal-2014 (06)
Mel-Maaveerar-Naal-2014 (08-1)
Mel-Maaveerar-Naal-2014 (08-3)
Mel-Maaveerar-Naal-2014 (08-4) (1)
Mel-Maaveerar-Naal-2014 (09-1)
Mel-Maaveerar-Naal-2014 (09-2)
Mel-Maaveerar-Naal-2014 (09-4)
Mel-Maaveerar-Naal-2014 (09-5) (1)
Mel-Maaveerar-Naal-2014 (09-6) (1)
Mel-Maaveerar-Naal-2014 (09-7) (1)
unnamed
unnamed (1)

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை மனதில் நிறுத்தி யேர்மனியில் DORTMUND நகரில் பிரம்மாண்ட மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக நினைவுகூரப்பட்டது.
நண்பகல் 12.45 மணியளவில்  பொதுச்சடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து  தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.
உரையின் முடிவில் மணியோசை மண்டபம் நிறைக்க  மாவீரர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரர் ஒருவரின் சகோதரியால் ஏற்றிவைக்கப்பட்டது.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி மாவீரர் துயிலும் இல்லமும்  தூபிகளும் சுடர்களால் ஒளியூட்டப்பட்டு உத்தமர்களின் உறைவிடம் ஒளிப்பிரகாசமானது.
சுடர் ஏந்தி மாவீரர் குடும்பத்தவர் வரிசையாக நிற்க தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே என்கின்ற கல்லறைப்பாடல் மக்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டது. 
மாவீரர்களது குடும்ப உறவினரால் சுடர்வணக்கமும் தேசிய மலராம் கார்த்திகைப்பூக் கொண்டு மாவீரர்களுக்கான மலர்வணக்கமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழீழம் இசைக்குழுவினரால்  மாவீரர் கானங்கள் இசைக்கப்பட மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எமக்காய் வாழ்ந்து எமக்காய் மடிந்த ஈகைச் செல்வங்களே உங்களைப் போற்றுவதால் நாம் புனிதமடைகின்றோம்! உங்கள் கல்லறை மீதுமே சத்தியம் செய்து எம் பணி தொடர்வோம் என்று வரிசையாக மக்கள் துயிலுமில்லம் நோக்கி அணிவகுத்து மலர் தூவி சுடர் ஏற்றி தமது வணக்கத்தைச் செலுத்தினர்.
எங்கிருந்து என்பது புரியாது. எவர் பிள்ளைகள் என்று பாராது. என் பிள்ளைதான் நீயோ என்று எல்லோரும் தமது பிள்ளைகளாய் எண்ணி மாவீர்களை பூசித்த காட்சியானது தமிழினத்தையும் ஈழவிடுதலையையும் எந்தத் துரோகமும் எந்த சதித் தந்திரங்களுக்கும் வென்றுவிட முடியாது அவை தூர விரட்டியடிக்கப்படும் என்பதை உணர்த்தி நின்றது.
மண்டப மேடையில் இவ் ஆண்டின் சிறப்பு வெளியீடுகளாக எழுச்சிகானங்களை உள்ளடக்கிய 2 இறுவெட்டுக்கள் மாவீரர் நிகழ்ச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
தொடர்ந்த சிறப்பு விருந்தினரின் சிறப்புரை இடம்பெற்றது. மக்களின் உறுதியான போராட்டம் தொடர வேண்டிய அவசியத்தையும் இனவிடுதலை என்பது ஈழவிடுதலையைத் தவிர வேறெந்த வழியிலும் சாத்தியமாகப் போவதில்லை என்பதையம் வலியுறுத்தி அவரது பேச்சு அமைந்தது.
தொடர்ந்து மாவீரர்கள் நினைவாக எழுச்சி நடனங்கள், எமது மக்களின் அவலங்களை வெளிக்காட்டும் நாட்டிய நாடகம், கவிதைகள் என நிகழ்வுகள் அரங்கேறியது.
தமிழீழ விடுதலையை வென்றெடுக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்துதலில் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களையும் பலப்படுத்தி தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்பணிகளை உறுதியுடனும் ஒற்றமையுடனும் முன்நின்று நாம் முன்னெடுத்துச் செல்வோம்  என்றும் உறுதி கூறப்பட்டது.
இதேவேளை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்  மாவீரர் குடும்ப மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் முற்பகல் 10 மணியளவில் இருந்து மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு அதே மண்டபத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது.
எமக்காய் தம்மைத் தந்த மாவீரர்களை ஈன்றெடுத்தவர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் கிளைச் செயற்பாட்டாளர்களோடு கூடிநின்று மாவீரராகிய பிள்ளைகளையும் அவர்தம் வாழ்வையம் பகிர்ந்து கொண்டதோடு அப் பிள்ளைகளின் செயலை எண்ணிப்  பாராட்டினர்.
அவர்களது இலட்சியத்தில் தமிழினம் விடிவுபெற வேண்டும் என்றும் மனதாரப் பிரார்தித்தனர். இந் நிகழ்வின் இறுதியில் மதிப்பளிப்புக் குழுவினரால் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.



கட்டாரில் எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்!
தமிழீழ தாயக விடுதலைக்காய் வித்தாகிய எமது மாவீரர் நாள் நிகழ்வுகள் டோகா கட்டார் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடத்தப்பட்டது.
இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டு எம் விடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
பின்லாந்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்
பின்லாந்து தமிழர் பேரவையை சேர்ந்த தினேஷ் தலைமையில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகியது.
முதலாவது நிகழ்வாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டது, பொதுச் சுடரினை பின்லாந்து தமிழர் அவையின் செயலாளர் அவர்கள் ஏற்றி வைத்தார்கள், அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை தமிழகத்தில் இருந்து வருகைதந்து இருந்த பேராசிரியர் மு. செ.அறிவு அரசன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து மாவீரர் நினைவு மணி ஒலி எழுப்பப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. பின்னர் மாவீர்களுக்கும் போரினால் கொல்லப்பட்ட பொது மக்களுக்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு உரையினை பேராசிரியர் மு.செ.அறிவு அரசன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து அன்னை பூபதி கலைக்கூட ஆசிரியர்களினதும் மாணவர்களினதும், மாவீரர்களின் ஈகத்தை போற்றும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்
தேசிய மாவீரர் நாள் பெல்ஜியம் நாட்டில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை தொடர்ந்து எமது மண்ணுக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களுக்காக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
சிறப்பு பேச்சாளராக யேர்மனியில் இருந்து கலந்துகொண்ட ஆசிரியர் தமிழ் மக்கள் மாவீரச் செல்வங்கள் எம்மிடம் விட்டுச்சென்ற பணிகளை, தேசியக் கடமைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிகழ்த்தினார்.
தேசிய மாவீரர் நாளில் கலந்து கொண்ட மக்கள் தமது பிள்ளைகளை வணங்கியதோடு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக் கொண்டனர்.

பிரான்ஸ் கடலில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்
விடுதலைப் போராட்டத்தின் போது வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் அதன்பால் கொல்லப்பட்ட மக்களுக்கும் பிரான்ஸ் உள்ள கடலில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு நினைவு கூறப்பட்டது.