பக்கங்கள்

முறையான ஒழுங்காற்று நடவடிக்கைகளை உருவாக்கும் பொருட்டு ஒரு குழு – த.தே.கூ


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு

கூட்டம் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று மாலை இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இங்கு தற்போதைய அரசியல் நிலைமைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் முக்கிய சில முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமான பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்கள் தெரிவிக்கையில்,
1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனமாகவும், சில கட்டுப்பாட்டுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கூட்டமைப்பை கொண்டு நடத்த வேண்டியிருப்பதனால் இவற்றை உள்ளடக்கிய யாப்பொன்று தயாரிக்கப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
2. ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் தேசிய மாநாடுகளின் தீர்மானங்களுக்கேற்ப தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பல்வேறுபட்ட மக்கள் அமைப்புக்களை உள்ளடக்கி தமிழ்த் தேசியச் சபையொன்றை நிறுவுதெனவும் முடிவுசெய்யப்பட்டது.
3. வடக்கு மாகாணசபை தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும், அதற்கான ஆலோசனைகளை பரிமாறிக்கொள்வதற்குமாக மாதாந்த கூட்டமொன்றை முதலமைச்சருடன் இணைந்து மேற்கொள்வதெனவும் முடிவுசெய்யப்பட்டது.
4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக முறையான ஒழுங்காற்று நடவடிக்கைகளை உருவாக்கும் பொருட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டதிட்ட வரைமுறைகளுக்கும் கொள்கைகளுக்கும் எதிராகவோ முரணாகவோ செயற்படுவோர் மீது ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில் குழுவொன்றை அமைப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.

எல்லாளன் படை எச்சரிக்கை பிரான்ஸ் பத்திரிகை மூடப்பட்டது!


எல்லாளன் படை என்ற பெயரில் பிரான்ஸ் இலிருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகைக்குமின்னஞ்சல் மூலமும் நேரடியாகவும் துப்பாக்கி முனையில் பதில் சொல்ல வேண்டிவரும் என்ற மிரட்டல் காரணமாக அந்த பத்திரிகை தற்காலிகமாக தமது பணிகளை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது இதன் முழுமையான அறிக்கை இணைக்கப்படுகிறது.

இடை விலகுகின்றோம் - விடியலில் சந்திப்போம்

தொழில்நுட்ப தகவற் தொடர்பாடல் வளர்ச்சிகள் உலக அச்சு ஊடகங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி மெல்ல மெல்ல அழித்தும் வருகின்றது. பொருளாதார ரீதியாக பத்திரிகைகளின் விற்பனை மற்றும் விளம்பர வருவாயில் மட்டும் தங்கியிருக்காத அச்சு ஊடகங்களும், கட்சி அல்லது அமைப்புக்கள் சார்ந்த பிரச்சார அச்சு ஊடகங்களுமே இன்று ஓரளவுக்கு நீடித்து நிலைத்திருக்கக்கூடியதாக இருக்கின்றது. இதில் புதிதாக ஒரு பத்திரிகையை ஆரம்பிப்பதென்பது இன்று கற்பனை செய்து பார்க்கமுடியாத நிலையில், வெளிவந்துகொண்டிருக்கும் பத்திரிகையை தக்கவைப்பதென்பது பெரும் போராட்டமாகவே இருக்கின்றது.

இந்த நிலையில்தான் ஈழமுரசு பத்திரிகை கடந்த பல ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. புலம்பெயர்ந்த நாடொன்றில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெளிவந்த பத்திரிகை என்ற சாதனையும் ஈழமுரசு பத்திரிகையையே சாரும். பொருளாதார நெருக்கடிக்குள் மூச்சுத் திணறியபோதும் மக்கள் இன்றுவரை உறுதியோடு பற்றுக்கொண்டிருக்கும் ஒரேயரு நம்பிக்கைக்குரிய பத்திரிகையான ஈழமுரசை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதற்காக கடுமையான உழைப்பை வழங்கவேண்டி இருந்தது.

ஆனால் இன்று ஈழமுரசையும் அதனை வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஊடக இல்ல அமைப்பையும் மூடும் நிலைக்குத் தள்ளியுள்ளது, சிறீலங்காவின் அரச பயங்கரவாதம். போர் நிறைவடைந்ததன் பின்னர் சிறீலங்காவின் இனப்படுகொலைக் கரங்கள் புலம்பெயர்ந்த நாடுகளெங்கும் வியாபித்திருக்கின்றது என்பதை எத்தனையோ ஆதாரங்களுடன் ஈழமுரசு கடந்த காலங்களில் வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. அதற்கு முதற் பலியானவர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு. பரிதி அவர்கள். இன்று அதன் கொலைக் கரங்கள் ஊடக இல்லத்திற்குள்ளும் நுழைந்திருக்கின்றன.

ஈழமுரசின் தோற்றம்
1995ம் ஆண்டு தமிழர் திருநாளில் கப்டன் கஜன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஈழமுரசு பத்திரிகை, பொருளாதார நெருக்கடியால் 2004ம் ஆண்டின் ஆரம்பத்தில் மூடப்பட்ட நிலையில், மீண்டும் அதனைக் கொண்டுவரவேண்டும் என விரும்பியவர்கள் சிலர்.

சட்டத்திற்கு உட்பட்டு அந்த இதழை மீண்டும் கொண்டுவருவதில் இருக்கும் சிக்கல்களைக் கடந்து, ‘பூபாளம்’ என்ற நிறுவனம் ஊடாக அந்த இதழைச் சட்ட ரீதியாகக் கொண்டுவருவதில் வெற்றியும் கண்டனர். ஆனால், எத்தனை காலத்திற்கு மீண்டும் இந்த இதழைக் கொண்டுவர முடியும் என்ற கேள்வியும் எழாமலில்லை. ஏனெனில் ஒரு நிறுவனமாக இருந்து இதழை வெளியிடுகின்றபோது அரசுக்கு கட்டவேண்டிய வரி மற்றும் வேலையாட்களுக்கான அரசு கட்டுப் பணம் என்பவை தொடர்ச்சியாக செலுத்தவேண்டும். அவற்றைக் கட்டாது போனால் அதிரடியாகவே நிறுவனத்தை மூடும் அதிகாரம் அரசுக்கு இருக்கின்றது.

எனவே, இலாப நோக்கமற்ற தேசவிடுதலையையே இலக்காகக் கொண்ட ஒரு பத்திரிகைக்கு, பின் தளமாக நிதி ஆதாரம் இருந்தாலேயே அதனைத் தொடர்ச்சியாகக் கொண்டுவரமுடியும். அந்தத் தளம் இல்லாதபோது ஒரு கட்டத்தில் அது ஆட்டம் கண்டு, மீண்டும் மூடப்படும் நிலையையே அடையும். இது பூபாள நிறுவனத்திற்கும் தவிர்க்கமுடியாததாகவே இருக்கும் என்பது தெரிந்தே இருந்தது. எனவே இதழை இலவசமாக வெளியிடுவதன் ஊடாக அதிக விளம்பரங்களைப் பெறமுடியும், ஈழமுரசை மேலும் சில காலம் தக்கவைக்க முடியம் என்ற அடிப்படையில் அவ்வாறான ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஈழமுரசுடன் பணியாற்றியவர்களுடனான சந்திப்பில் அதனை அறிவித்தபோது, “இலவச இதழ் மதிப்பற்றது. நாளை லாச்சப்பல் வீதிகளில் அது கால்களுக்குள் கிடந்து மிதிபடும். இதற்கு ஒத்துழைக்க முடியாது” எனக்கூறி அதிரடியாகச் சிலர் ஈழமுரசை விட்டு வெளியேறினார்கள்.
ஆனால், அப்போதிருந்த நிலையில் மாற்று வழி எதுவுமில்லை. இதழைத் தக்கவைப்பதற்காக இலவச இதழாக ஈழமுரசு வெளிவரத் தொடங்கியது. ஆனாலும் இதுவும் ஒரு கட்டத்திற்கு மேல் கடந்து செல்வது கடினமாகவே இருக்கும் என்பதை அறியாமல் இல்லை.
இந்த நிலையில்தான் இந்த இதழைத் தொடர்ச்சியாக கொண்டுவருவதற்கு மாற்று வழிகள் இருக்கின்றனவா என்பதை சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஆராய்ந்தபோது வரிகள் இல்லாமல் கொண்டுவருவதற்கான ஒரு மாற்று வழி இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இதற்கிடையே எதிர்பார்த்ததுபோலவே பூபாளம் நிறுவனமும் பொருளாதார நெருக்கடியால் நலிவடைந்து மூடப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருந்தது. அதேவேளை, தாயகத்தில் விடுதலைப் போராட்டமும் உச்சக் கட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
2009 மே, பெரும் இன அழிப்புடன் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் பல குழப்பகரமான செய்திகள் பரவிக்கொண்டிருந்த நிலையில், அடுத்து என்ன என்ற நிலை ஈழமுரசு உட்பட அனைவருக்குமே இருந்தது. அப்போதுதான், விடுதலைப் புலிகளால் இறுதிக் கட்டத்தில் வெளிநாடுகளுடனான தொடர்புக்கென நியமிக்கப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபனிடம் இருந்து ஒரு அறிக்கை வெளிவர இருப்பதாகவும் அதில் என்ன உள்ளடக்கம் இருக்கப்போகின்றது என்ற தகவலும் கிடைத்தது. அந்த அறிக்கையை விரும்பியோ, விரும்பாமலோ வெளியிடவேண்டிய நிர்ப்பந்தமும் ஈழமுரசுக்கு இருந்தது.
ஆனால், ஏற்கனவே குழப்பமடைந்திருக்கும் மக்கள் அதனை வெளியிட்டால் மேலும் குழப்பமடைவார்கள். விடுதலைப் போராட்டத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் இவ்வாறான ஒரு அறிக்கையை எதற்காக இப்போது அவசர அவசரமாக வெளியிடவேண்டும், இதற்குள் ஏதோ சதித்திட்டம் இருக்கின்றது என்பதையும் எம்மால் புரிந்துகொள்ளமுடிந்தது. இதனால், அந்த அறிக்கையை வெளியிடுவதில்லை என்ற உறுதியான முடிவை ஈழமுரசில் பணியாற்றியவர்கள் உறுதியோடு எடுத்தார்கள். ஏற்கனவே மூடப்படும் நிலையில் இருந்த பூபாளம், அரசு மூடுவதற்கு முன்பாக, அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக இழுத்து மூடப்பட்டது.
ஊடக இல்லத்தின் உருவாக்கம்
பூபாள நிறுவனம் மூடப்பட்டபோதும் அதில் பணியாற்றியவர்கள் அனைவரும் அங்கேயே இருந்தார்கள். ஈழமுரசை மீண்டும் வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதில் உறுதியோடு பணியாற்றினார்கள். இந்தக் காலத்தில்தான் ‘ஊடக இல்லம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதிகொண்ட சிலர் தயக்கம் காட்டியபோதும், பூபாள நிறுவனத்தை நிருவகித்துவந்த மாமா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மறைந்த நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களே ஊடக இல்லத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். 2012 டிசெம்பர் 15ல் அவர் மறையும் வரை அதற்கு அவரே தலைமை தாங்கினார்.
2009ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் வாரம் தனது முதல் இதழை ஊடக இல்லம் வெளியிட்டது. சிறீலங்கா அரசு கட்டவிழ்த்துவிட்ட பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் பல ஆதாரபூர்வமான செய்திகளை ஈழமுரசு வெளிக்கொண்டுவரத் தொடங்கியது. ஊடக இல்லம் நடத்திவந்த சங்கதி இணையத்தளம் அதன் உரிமையாளரால் பறிக்கப்பட்டு, முடக்கப்பட்ட நிலையில் சங்கதி24, தமிழ்க்கதிர் எனும் இரு இணையங்களையும் ஊடக இல்லம் நடத்திவந்தது.
இந்த ஊடகங்கள் சிங்களப் பேரினவாத அரசு தனது பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பதட்டத்தில் வைத்திருப்பதற்கும் பெரும் தடைக்கல்லாக இருந்தது.
இதேவேளை, அறிக்கையை வெளியிடாது புறக்கணித்த ஈழமுரசின் மீது கே.பியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்களால் நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் பிரயோகிக்கப்பட்டன. கே.பியை கைது செய்து கொழும்பிற்குக் கொண்டுசெல்லப்பட்டு, சிறீலங்கா அரசுடன் இணைந்து அவர் இயங்கத் தொடங்கியதன் பின்னர் இந்த அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கத் தொடங்கின.
ஊடக இல்லத்தில் பணியாற்றிய ஒருவர் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் லாச்சப்பல் வீதிகளில் ஒட்டப்பட்டன. இந்த அச்சுறுத்தல்களை பிரெஞ்சுக் காவல்துறையிடம் பதிவு செய்துவிட்டு, ஈழமுரசு தனது பணியை முன்னிலும் அதிக வீச்சுடன் முன்னெடுக்கத் தொடங்கியது.
மக்களைக் குழப்பமடைய வைப்பதற்காக வேறு சில பத்திரிகைகள் லாச்சப்பலை ஆக்கிரமித்தன. ஆனாலும் மக்கள் குழப்பமடையவில்லை. ஈழமுரசுக்கே தமது முதலிடத்தை வழங்கினார்கள். இதனால் அவை வந்தவேகத்திலேயே காணாமலும் போயின.
ஈழமுரசு இதழை லாச்சப்பல் வீதியில் மனித கால்களுக்கு கீழே எங்கும், என்றும் காணமுடியவில்லை. மக்கள் தேடிவந்து இதழை வாங்கிச் செல்லும் நிலை அதிகரித்திருந்தது. இதனால் வர்த்தகர்கள்தான் நெருக்கடியை எதிர்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் ஈழமுரசைத் தேடிவரும் வாசகர்களை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. ஈழமுரசில் ‘இலவசம்’ என்று போடாதீர்கள். காசுக்கு விற்பனை செய்யுங்கள், மக்கள் வாங்குவார்கள் என்று அவர்கள் வலியுறுத்தத் தொடங்கினார்கள்.
ஆனால் அதிகளவு மக்களை ஈழமுரசு சென்றடைய வேண்டும் என்பதற்காக இதழை இலவசம் என்ற நிலையில் இருந்து மாற்றுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்தோம். எனினும், வர்த்தகர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக ‘வர்த்தக நிலையங்களில் மட்டும் 30 சதம்’ என்ற வாசகத்தை சேர்த்துக்கொண்டோம்.
தொடர்ச்சியானஅச்சுறுத்தல்களும் தடைகளும்
2009ற்குப் பின்னர் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக இல்லாத வெற்றிடத்தில் பொய்களும், புரளிகளும் சூழ்ந்துகொண்டன. இணையத் தளங்கள் பல தான்தோன்றித்தனமாகத் தோன்றி மக்களை மேலும் மேலும் குழப்பமடைய வைத்துக்கொண்டிருந்தன. இதற்குள் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு முடிவு செய்து, முகமூடி அணிந்து வேசமிட்டவர்களையும், விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவென்ற போர்வையில் துரோகமிழைத்துக் கொண்டிருந்தவர்களையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தத் தொடங்கினோம்.
இதில் கலாநிதி சேரமானின் பணி மிகவும் காத்திரமாக இருந்தது. அதில் சுட்டிக்காட்டப்பட்டவர்களால் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து இன்றுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்பதில் இருந்து அதன் உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்துகொண்டிருப்பார்கள். மக்களை ஏமாற்றிய பலரது வேடங்கள் ஈழமுரசினால் கலைக்கப்பட்டன. அவர்களால் மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியவில்லை. இனியும் ஏமாற்றமுடியாது என்றே நம்புகின்றோம்.
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்ற வேறுபாடின்றி தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திசை திரும்பும் எவரையும் துணிச்சலோடு நாம் எதிர்கொண்டோம். அவர்களின் வழி தவறிய பயணத்தை ஒரு நாணயக் கயிற்றைப்போல் இழுத்துப்பிடித்து நிறுத்தினோம். தேச விடுதலையை நோக்கி செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தை எமது எழுத்துக்கள் அவர்களுக்கு ஏற்படுத்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுகின்ற தவறுகளைக்கூட நாம் நேர்மையோடு சுட்டிக்காட்டத் தவறவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய ஒரு சக்தியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்க அதனுள் ஆழ ஊடுருவும் நபர்களைப் பற்றிய ஆதாரங்களை எடுத்துவைத்தோம்.
அதேவேளை, ஈழமுரசினதும் சங்கதி24, தமிழ்க்கதிர் இணையங்களில் வெளியாகும் உண்மைகளை முறியடிக்க முடியாமல் திணறிய சிங்களப் பேரினவாதத்தின் நீண்ட கொலைக் கரங்கள் பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தலை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இணையங்கள் பலதடவைகள் முடக்கப்பட்டன. பலதடவைகள் செயலிழக்கவைக்கப்பட்டுச் சிதைத்தழிக்கப்பட்டன. அண்மையில் கூட இவ்விரு இணையங்களும் முழுமையான தாக்கியழிப்புக்கு உள்ளானதை வாசகர்கள் அறிந்துகொண்டிருப்பார்கள்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் அந்தப் பிரிவு, விடுதலைப் புலிகளின் இந்தப் பிரிவு எனப் பலமுறை முகம் தெரியாத பலரும், முகம் தெரிந்த சிலரும் ‘விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஈழமுரசை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு’ மிரட்டினார்கள். எங்கே விடுதலைப் புலிகள் என்று கேட்டால் அவர்களிடம் அதற்கான பதில் இல்லை. ஈழமுரசை நிறுத்த வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அது முடியாதபோது ஈழமுரசை நிறுத்த வைப்பதற்காக விளம்பரம் தரும் வர்த்தகர்களை அணுகி விளம்பரங்களை நிறுத்தப் பணித்தார்கள். ஈழமுரசில் விளம்பரம் வந்தால் என்றைக்குமே இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள முடியாது என்றளவிற்கு விளம்பரதாரர்களை அவர்கள் அச்சுறுத்தினார்கள். இதில் ஓரளவு வெற்றியையும் அவர்கள் கண்டார்கள்.

ஆனாலும், தேசியத்தின் மீது பற்றும் ஈழமுரசு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கொண்ட வர்த்தகர்களும் ஆதரவாளர்களும் அதன் வருகைக்கு பக்கபலமாக இருந்தார்கள். இன்றுவரை இந்த இதழ் வெளிவருவதற்கு அவர்களின் ஒத்துழைப்பே முழுமுதற் காரணம். எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் எத்தனை அச்சுறுத்தல்களை விடுத்தாலும் ஈழமுரசு வெளிவந்துகொண்டிருப்பதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சாம, தான, பேத, தண்டம் என்பதுபோல், ஊடக இல்லப் பணியாளரின் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதனையும் கடந்து ஈழமுரசு தனது பயணத்தை தொடர்ந்தது.

இந்த நிலையில்தான் கடந்த 18ம் திகதி வியாழக்கிழமை ஊடக இல்லத்தின் பணியாளர் ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஊடக இல்லத்தில் தனது பணிகளை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த அவரை பின்தொடர்ந்து சென்ற தாக்குதலாளி அவரது இல்லத்திற்கு மிக அருகில் வைத்து இந்தக் கொலை முயற்சியை மேற்கொள்ள முனைந்திருக்கின்றார்.

கொண்டுவந்த ஆயுதம் சடுதியாக இயங்க மறுத்ததாலும், சம்பவம் நடந்த இடத்தில் அதிகமாக மக்கள் இருந்ததாலும் அவர்களது முயற்சி கைகூடவில்லை. சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களின் பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்றை ஏற்படுத்திய அந்தக் கொலை முயற்சியாளர்கள், ‘24 மணி நேரத்திற்குள் ஈழமுரசையும், ஊடக இல்லத்தையும் இயக்கத்திடம் ஒப்படைக்குமாறு பணித்ததுடன், அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் ஊடக இல்லப் பணியாளர் ஒரு வருடத்திற்குள் திரு. பரிதி அவர்களைப் போன்று படுகொலை செய்யப்படுவார்’ என்றும் எச்சரித்தார்கள்.

இவ்வாறான எச்சரிக்கைகள் பல தடவைகள் எதிர்கொண்ட நாம் இந்த எச்சரிக்கையையும் காவல்துறையிடம் பதிவு செய்துவிட்டு எமது பணியை முன்னெடுக்கவே விளைந்திருந்தோம். ஆனால், சம்பவம் நடந்த மறுநாளான 19ம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சல் இந்தக் கொலைக் கரங்கள் மிக நீளமானவை, அவை சிங்களப் பேரினவாதத்திடம் இருந்தே வருகின்றன என்ற உண்மையை புரிந்துகொள்ள முடிந்தது. ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையில் (அதனைப் பெட்டிச் செய்தியில் பார்க்கவும்) தாங்கள் ஆயுத முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அதற்கு அடிபணியாதுவிட்டால் தங்கள் துப்பாக்கி பேசும் என்றும் எச்சரித்துள்ளார்கள். இந்த எச்சரிக்கையை எம்மால் அலட்சியப்படுத்த முடியவில்லை.
ஏனெனில் ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் சிங்களப் பேரினவாத அரசபடைகள் யாழ்குடா நாட்டில் நடத்திய படுகொலைகளை உலகம் நன்கறியும். விடுதலைப் புலிகளின் இரகசிய ஆயுதப்படை போன்ற தோற்றத்தில் சிங்களப் படைகளால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட அந்தப் படுகொலைகளில் ஏராளமான தமிழ் இளைஞர், யுவதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேவேளை, புலம்பெயர்ந்த நாடுகளிலும் விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சு வெளிப்படையாக அறிவித்திருந்த நிலையில்தான் திரு. பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எனவே, இந்த எச்சரிக்கையை அத்தனை இலகுவில் சாதாரணமாக எடுக்க முடியாது.
சிறீலங்காப் பட்டியலில் விடுபட்டபிரான்ஸ் ஊடக இல்லமும் ஈழமுரசும்
அண்மையில் சிறீலங்கா அரசு வர்த்தமானி, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதாரவாளர்கள் என்று குற்றம்சாட்டி ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டிருந்தது. அவற்றைவிட புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளங்கள் என்ற பட்டியலையும் தமது இணையத்தில் இணைத்திருந்தது. அதில் பிரான்சிலுள்ள ஊடக இல்லமோ, பிரான்ஸ் ஊடக இல்லத்தில் பணியாற்றுபவர்களோ எவரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. ஊடக இல்லம் விடுதலைப் புலிகளின் ஓர் ஆதரவு சக்தியென்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், சிறீலங்கா எதற்காக பிரான்சில் உள்ளவர்களை மட்டும் தவிர்த்திருந்தது பலத்த கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது.
ஏனெனில் ஊடக இல்லத்திற்காக வேறு நாடுகளில் இருந்து பணியாற்றுபவர்கள் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த நிலையில், பிரான்சில் பணியாற்றுபவர்கள் மட்டுமே தவிர்க்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து சில இராஜதந்திரிகளுடன் ஆராய்ந்தபோது, அவர்கள் சில காரணங்களை முன்வைத்தார்கள். அதாவது ‘போடவேண்டியவர்களை, அந்தப் பட்டியலில் போடவில்லை’ என்பதுதான் அது. அதாவது தமது கொலைக் கரங்களால் அழிக்கப்படவேண்டியவர்களை அந்தப் பட்டியலில் இணைத்துவிட்டால் நாளை அவர்கள் மீது எதாவது நடவடிக்கையை மேற்கொண்டால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் நேரடியாக தங்கள் மீதே வரும் என்பதை சிறீலங்கா அறிந்திருந்தது.
அத்துடன், அந்தப் பட்டியலில் இணைக்காவிட்டால் இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவில்லாதவர்கள் என்ற சிந்தனையும் மக்கள் மத்தியில் எழும், இதன்மூலம் ஊடக இல்லத்தை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஏன் சிறீலங்காவின் ஆதரவுடன் ஊடக இல்லம் இயங்குகின்றது என்ற ஒரு பரப்புரையையும் இதன்மூலம் செய்யமுடியும் என்ற ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் திட்டத்துடனேயே அதனைத் தவிர்த்திருக்கக்கூடும் என்றும் விளக்கம் கிடைத்திருந்தது. அதாவது ஏனைய நாடுகளில் இவ்வாறான படுகொலைகளில் இறங்குவது சிறீலங்காப் புலனாய்வாளர்களுக்கு அத்தனை இலகுவாக இருக்காது.
ஆனால், பிரான்சில் ஏற்கனவே மூவர் இவ்வாறாக படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்னொருவரை படுகொலை செய்வது சிறீலங்காவிற்கு அத்தனை கடினமாக இருக்காது என்றே சிறீலங்கா கருதும். இந்த நிலையில்தான் இந்தக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இதனைப் புறந்தள்ளிவிட்டு பயணிப்பதென்பது, கண்ணை மூடிக்கொண்டு பாழும் கிணற்றுக்குள் குதிப்பதைப் போன்றது.
இந்த நாடுகளில் உள்ள சட்டங்களைப் புறந்தள்ளி, மிகவும் துணிவோடு கொலை அச்சுறுத்தலை விடுக்கின்ற சிங்களத்தின் நீண்ட கொலைக் கரங்களால், ஊடக இல்லத்தின் கழுத்தை நெரிப்பது அத்தனை கடினமாக இருக்காது என்பதை நாம் உணர்ந்துகொண்டிருந்தோம். ஊடக இல்லத்தில் உள்ள ஒருவரை இலக்கு வைத்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளபோதும், இது ஒட்டுமொத்த ஊடக இல்லத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம். ஏனெனில் ஊடக இல்லம் என்பது ஒரு தனி மனிதனின் உழைப்பில் மட்டும் இயங்கும் ஓர் அமைப்பு அல்ல. உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாயகத்தில் இருந்து இன்னமும் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊடகத்தின் பணியாளர்கள் முதல், தாய்த் தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் வியாபித்திருக்கும் எத்தனையோ பல விடுதலையை நேசிக்கும் அர்ப்பணிப்பாளர்களால்தான் ஊடக இல்லத்தினால் இத்தனை வேகமாகவும், இத்தனை கனதியாகவும்,  ஆதாரங்களையும் உண்மைகளையும் வேகமாக எடுத்துவந்து மக்கள் முன் வைக்கமுடிகின்றது.
எனவே, ஊடக இல்லத்தில் இருந்து ஒருவரை வெளியேற்றுவதால் அந்த ஊடக இல்லத்தின் பணிகள் நின்றுவிடப்போவதில்லை. இதனைத் தெரிந்துகொண்டே எதிரி இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றான் என்றால், அவனிடம் அடுத்த அடுத்த இலக்குகளும் இருக்கும் என்பதை நாம் அறியாமல் இல்லை. ‘நிலத்தை இழ, போராளிகளைத் தக்கவை. நிலத்தை இழந்தால் போராளிகளைக்கொண்டு நாளை நிலத்தை மீட்கலாம்.போராளிகளை இழந்தால் நாளை நிலத்தை மீட்க முடியாது? என்பது மாவோ சேதுங்கின் தத்துவ வாக்கு. எனவேதான், நாமும் ஊடக இல்லத்தையும் அது வெளியிட்டு வந்த ஈழமுரசையும் இழக்கின்ற முடிவிற்கு வந்திருக்கின்றோம்.
சொத்தை யாரிடம் ஒப்படைப்பது
ஈழமுரசிடம் சொத்துக்கள் இருப்பதாக பிரச்சாரங்கள் எதிரியால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தனியார் பெயரில் உள்ள சொத்துக்கள் நாளை அந்தத் தனியாருக்குச் சொந்தமாகி அவரது குடும்பத்திற்கே போய்விடப்போகின்றது என்று தமிழ் வானொலி ஒன்று ஓயாமல் அழுது புலம்பி வருகின்றது. ஈழமுரசின் சொத்து கடந்த மூன்று மாதங்களாக கட்டப்படாத வாடகைப் பணம், கடந்த மூன்று மாதங்களாக கட்டமுடியாமல் இருக்கும் அச்சகக் கூலி, கடந்த ஆறு மாதங்களாக கட்டமுடியாமல் இழுபறிப்படும் பத்திரிகையைக் காவிவந்த தொடருந்து சுமைக்கூலி. கடன்தான் இப்போது ஊடக இல்லத்தின் மிகப்பெரும் சொத்தாக இருக்கின்றது.
இதனையும்விட சொத்தென்று எஞ்சியிருப்பது ஒன்றேயன்றுதான். அது கடந்த 18 ஆண்டுகளாக வெளிவந்த ஈழமுரசு பத்திரிகைகள் மட்டும்தான். ஒரு ஆவணம்போல் காப்பாற்றி வரும் அந்த ஆவணப் பத்திரிகையிலும் தங்களது அடைக்கலக் கோரிக்கை¬யை உறுதிப்படுத்தும் தகவலை, செய்தியைப் பெறுவதற்காக அவற்றைப் பார்வையிடப்போவதாக வாங்கிப் பார்க்கும் நல்ல மனிதர்கள் சிலர், ஒருசில இதழ்களை திருடிச் சென்றுவிட்டார்கள். அவைபோக, எஞ்சியிருக்கும் அந்த ஆவணத்தை இப்போது நாம் யாரிடம் ஒப்படைப்பது?
ஊடக இல்லத்தில் பணியாற்றும் யாருமே ஊதியத்திற்காகப் பணியாற்றியதில்லை. தங்கள் சொந்தச் செலவிலேயே போக்குவரத்தினையும் செய்துவந்தார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாக இருந்தபோதும், தமக்குக் கிடைத்த நேரத்தையெல்லாம் ஊடக இல்லத்திற்காகச் செலவழித்தார்கள்.  ஆனால், லாச்சப்பல் வர்த்தகர்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் கூட்டம் என்று வசைபாடி மகிழ்ந்தது ஒரு கூட்டம்.
திலீபன் நினைவு நாட்களில் பிரிகின்றோம்
இது கனதியான நாட்கள். தேச விடுதலைக்காக மிக உன்னதமான அர்ப்பணிப்பைச் செய்த தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவு நாட்கள். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்று தன் இறுதி மூச்சுவரை முழக்கமிட்டவர் மாவீரன் திலீபன். விடியல் பிறக்கும், தேசம் மலரும் என்ற நம்பிக்கையோடு கண்களை மூடிக்கொண்ட அந்தத் திலீபனின் நினைவு நாட்களில் ஆரம்பித்த ஊடக இல்லத்தின் பயணம் ஐந்து ஆண்டுகள் பயணத்தின் பின் அதே திலீபனின் நினைவு நாட்களில் தனது பயணத்தை நிறுத்தவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் விடுதலைக்கான பயணம் ஓயப்போவதில்லை.
அந்த உன்னதமான தியாகியினதும் விடுதலைக்காக வீழ்ந்த ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் மக்களினதும் கனவுகள் ஒருநாளும் வீண்போகாது. தேசம் ஒரு நாள் நிச்சயம் விடியும். அடிவானில் மறைந்துள்ள எங்கள் தேசச் சூரியன் ஓர் அதிகாலையில் மீண்டும் கதிர்களை வீசியபடி எழுந்துவரும். அதுதான் தமிழர்களின் விடியல் நாள். அந்தப் பொன்னான நாளில் மீண்டும் நாம் தலை நிமிருவோம்.
இந்தவேளையில் எங்கெங்கோ எல்லாம் இருந்து ஊடக இல்லத்தின் வளர்ச்சிக்கு தோளோடு தோள் நின்று உதவிய அனைத்து உள்ளங்களையும், உறவுகளையும் நன்றியுடன் நினைவு கொள்கின்றோம். ஆதரவு தந்த வர்த்தகர்களின் கரங்களை உறுதியாகப் பற்றிக்கொள்கின்றோம். அடக்குமுறைகள் தொடரும் வரைக்கும் விடுதலைக்கான போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அந்த விடுதலையைப் பெறும் வரைக்கும் இலக்குநோக்கிய பயணம் நிற்காது.

எனவே, இது முடிவல்ல.

தற்காலிக ஓர் இடைவிலகலே...

இன்றைய நாள் காணொளிச் செய்திகள்


இன்றைய நாள் காணொளிச் செய்திகள்

1.மீண்டும் போர் வந்தால் காணிகளை திரும்பத்தர வேண்டும் இலங்கை இராணுவம்
2.மகிந்த அரசுக்கெதிராக எதிரணிகள் திரள வேண்டிய சந்தர்ப்பம் இது -சந்திரிக்கா
3.மகிந்த சிந்தனை ஆட்சியே என்ற கனவுக் கோட்டை தகரத் தொடங்கியுள்ளது
4.மாவனல்ல பகுதியில் 18 கடைகள் எரிந்தது


ஐரோப்பா போல புலிக்கொடியுடன் திரண்டது தமிழகம்



சென்னையில் நடைபெற்ற மாபெரும் நீதிக்கான பேரணியில்
மகிந்த மற்றும் சுப்பிரமணியன் சாமி கொடும்பாவிகள் எரிப்பு!  இன்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டனர். தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பட்டடில் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இப் பேரணி நடைபெற்றது .














அமைச்சரின் கிழிந்த பாதணியை விற்கவும் மகிந்த நிபுணர் குழு நியமனம்


பல­மிக்க நாடு ஒன்றின் தலை­வரை சந்­தித்து கைலா­கு­கொ­டுக்­கப்­போகும்
அளப்­ப­ரிய ஆர்வம் அமைச்­ச­ருக்கு. கைலாகு கொடுக்­கும்­போது அணி­ வ­தற்­கான உடை தயா­ரா­கி­விட்­டது. ஆனால் அதற்­கேற்ற பாதணி தெரிவு செய்­வ­திலும் மிகவும் அக்­கறை. அணி­யப்­போ­கின்ற உடை வெள்ளை நிறம் என்­பதால் பாத­ணியும் வெள்ளை நிறத்தில் அமை­ய­வேண்டும் என்­பதில் அவர் உறு­தி­யாக இருந்தார். 
இதனால் வீட்டில் சில­காலம் பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் இருந்த வெள்ளை நிற பாத­ணி­யை தூசு தட்டி அணிந்­து­கொள்­கிறார். குறித்த உலகப் பலம்­வாய்ந்த நாட்டின் தலை­வரை சந்­திப்­ப­தற்­கான நேரமும் நெருங்­கி­விட்­டது. அமைச்சர் மிகவும் நேர்த்­தி­யான முறையில் உடை அணிந்து பாத­ணி­யையும் அணிந்து ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு செல்­கின்றார். அங்­குதான் அவ­ருக்கு அந்த அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. அந்த ஒரு கணம் அவர் உலக அளவில் பிர­ப­ல­ம­டைந்­து­விட்டார்.
உலகில் பலர் பல வழி­களில் ஒரே இரவில் உலகப் பிர­ப­ல­ம­டை­வ­துண்டு. சில சந்­தர்ப்­பங்­களில் இடம்­பெறும் நிகழ்­வுகள் சிலரை ஒரு கணத்தில் திடீ­ரென பிர­ப­லத்தின் உச்­சிக்கே கொண்டு சென்­று­விடும். இவ்­வா­றான நிலை­மை­களை உலகில் நாம் பல நிலை­களில் கண்­டுள்ளோம்.
அவ்­வா­றா­ன­தொரு சுவாரஷ்­ய­மான சம்­பவம் எமது நாட்­டிலும் கடந்­த­வாரம் நடந்­து­விட்­டது. ஆம். அடி­க­ழன்ற பாதணி வடி­வத்தில் மிக முக்­கிய அமைச்சர் ஒருவர் ஒரே இரவில் உலகப் பிர­பலம் அடைந்­து­விட்டார். உலகின் பிர­பல நாடுகள் பிர­பல நிறு­வ­னங்கள் அவரை தொடர்­பு­கொண்ட வண்ணம் உள்­ளன. அடி­க­ழன்ற பாத­ணி­களை 1000 மில்­லியன் டொலர்­க­ளுக்கு மேல் செலுத்தி கொள்­வ­னவு செய்­வ­தற்கு நாடுகள் முன்­வந்­துள்­ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலை கலா­சார அமைச்சர் டி.பி. ஏக்­க­நா­யக்­க­வுக்கு ஏற்­பட்ட அசெ­ள­க­ரியம் தற்­போது அவரை சர்­வ­தேச ரீதியில் பிர­ப­ல­மிக்க மனி­த­ராக மாற்­றி­விட்­டது. உலகின் கண் அவரின் பக்கம் தற்­போது உள்­ளது என்று கூறினால் அது மிகை­யா­காது.
அது­வொரு வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க சந்­தர்ப்பம். 28 வரு­டங்­களின் பின்னர் உலகின் பலம்­வாய்ந்த நாடான சீனாவின் ஜனா­தி­பதி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த மிக முக்­கிய தரு­ண­மாக அது அமைந்­தது. அவரின் இலங்கை விஜ­யத்­தின்­போது ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அவ­ருக்கு செங்­கம்­பள வர­வேற்பும் அரச மரி­யா­தையும் வழங்­கப்­பட்­டது. அப்­போது இலங்­கையின் தெரிவு செய்­யப்­பட்ட சில அமைச்­சர்கள் ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு சீன ஜனா­தி­ப­திக்கு அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டனர்.
இந்த சந்­தர்ப்­பத்தில் குறி­ப்பிட்ட சில அமைச்­சர்­களில் ஒருவர் அடி­க­ழன்ற பாத­ணி­யுடன் அவஸ்தைப் பட்­டுக்­கொண்­டி­ருந்­ததை யாரும் அந்த சந்­தர்ப்­பத்தில் அறிந்­தி­ருக்­க­வில்லை. ஆனால் குறித்த அமைச்­சரும் சமா­ளித்­துக்­கொண்­டே­யி­ருந்தார். (அவரும் எவ்­வ­ளவு நேரம்தான் சமா­ளிப்பார்) ஜனா­தி­பதி செய­ல­கத்தின் நுழை­வா­யி­லுக்கு செல்­லும்­போதே பாத­ணியின் அடிப்­பக்கம் கழன்­று­விட்­டது. 
அமைச்­சரும் சமா­ளித்­துக்­கொண்டே சீன ஜனா­தி­ப­திக்கும் கைலாகு கொடுத்­து­விட்டார். (அப்­பாடா ஒரு கட்­டத்தை தாண்­டி­விட்டோம் என்று அமைச்­ச­ருக்கு மகிழ்ச்­சி­யாக இருந்­தி­ருக்கும்) அதன் பின்னர் சீன தூதுக்­கு­ழுவின் பிர­தி­நிதி ஒரு­வ­ருடன் உடன்­ப­டிக்கை ஒன்றில் கைச்­சாத்­திடும் சந்­தர்ப்பம். அடி­க­ழன்ற பாத­ணி­யுடன் உடன்­ப­டிக்­கையிலும் அமைச்சர் கைச்­சாத்­திட்டார். யாரும் கண்­டி­ருக்­க­மாட்­டார்கள் என்று அமைச்சர் கரு­தி­யி­ருக்­கலாம். ஆனால் பாத­ணி­யி­லி­ருந்து அமைச்­சரின் பாதங்கள் வெளியே எட்­டிப்­பார்த்­ததை படப்­பி­டிப்பில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த புகைப்­ப­டப்­பி­டிப்­பா­ளர்கள் அவ­தா­னித்­து­விட்­ட­துடன் புகைப்­படங்­களை எடுத்து வெளி­யிட்­டு­விட்­டனர். இந்த கணம்தான் நாங்கள் ஆரம்­பத்தில் கூறி­யவாறு அமைச்­சரை ஒரே இரவில் உலகப்பிர­ப­ல­மாக்­கி­யது. இனி அமைச்சர் எம்­முடன் அந்த நிகழ்வை பகிர்ந்­து­கொள்­கிறார்.
கேள்வி: அன்­றைய தினம் என்ன நடந்­தது?
பதில்: உலகின் மிகவும் பலம் வாய்ந்த நாடான சீனாவின் ஜனா­தி­பதி இலங்கை வந்­தி­ருந்தார். அவரை சந்­திப்­ப­தற்கு ஒரு சில அமைச்­சர்­க­ளுக்கே ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு வரு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் எனக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது. நானும் மிகவும் மகிழ்ச்­சி­யுடன் நிகழ்­வுக்கு தயா­ரா­கினேன். வெள்ளை நிற உடையை அணி­வது என்று தீர்­மா­னித்தேன். அதன்­படி வெள்ளை நிற உடைக்கு ஏற்ற பாத­ணி­­ தெரிவு செய்­ய­வேண்­டி­யேற்பட்­டது. அப்­போது வீட்டில் இருந்த வெள்ளை நிற பாத­ணி­யை அணிந்­து­கொண்டு ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு புறப்­பட்டேன்.
ஜனா­தி­பதி செய­ல­கத்தின் நுழை­வா­யி­லுக்கு சென்­ற­போதே ஒரு பாத­ணியின் அடிப்­பக்கம் கழன்­று­விட்­டது. என்னால் ஒன்றும் செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டது. சமா­ளித்­துக்­கொண்டு சென்றேன். சீன ஜனா­தி­ப­திக்கு கைலாகும் கொடுத்தேன். பின்னர் சீன தூதுக்­கு­ழுவின் பிர­தி­நிதி ஒரு­வ­ருடன் இரண்டு நாட்டு ஜனா­தி­பதிகள் முன்­னி­லையில் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திடும் நிகழ்வு வந்­தது. உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டும்­போது அடுத்த பாத­ணியின் அடிப்­பக்­கமும் கழன்­று­விட்­டது. நான் சமா­ளித்­துக்­கொண்டு கைச்­சாத்­திட்டேன். ஆனால் மேல் பகு­தி­யி­லி­ருந்து புகைப்­படம் எடுத்­துக்­கொண்­டி­ருந்த புகைப்­பட பிடிப்­பாளர் ஒரு­வரின் கம­ராவில் எனது பாதங்கள் சிக்­கி­விட்­டன. அவர்கள் அதனை வெளிப்­ப­டு­த்­தி­விட்­டனர். இதுதான் நடந்­தது.
கேள்வி: பாத­ணியை அணி­யும்­போது அவை கழன்­று­விடும் அபா­யத்தை நீங்கள் உண­ர­வில்­லையா?
பதில்: இல்லை.
கேள்வி: தற்­போ­தைய நிலைமை என்ன?
பதில்:வெளி­நாட்­டு­ஊ­ட­கங்கள் அதனை வெளிப்­ப­டுத்­திய பின்னர் உலகம் என்னை பார்க்க ஆரம்­பித்­து­விட்­டது. ஜேர்மன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடு­களின் உலகப் பிர­பல நிறு­வ­னங்கள் என்னை தொடர்­பு­கொண்டு மிகப்­பெ­ரிய விலைக்கு எனது பாத­ணி­யைக் கேட்­கின்­றன. நான் இன்னும் ஒரு முடி­வுக்கும் வர­வில்லை.
கேள்வி: என்ன செய்­யப்­போ­கின்­றீர்கள்?
பதில்: மிகப்­பெ­ரிய விலைக்கு வந்தால் விற்­பனை செய்­யலாம். ஆனால் நான் ஒன்றும் செய்­ய­மாட்டேன். இது தொடர்பில் செயற்­ப­டு­வ­தற்­காக மூவர்­கொண்ட குழுவை நிய­மித்­துள்ளேன். பேரா­சி­ரியர் முதி­யன்ஸே திசா­நா­யக்க, நாடக தயா­ரிப்­பாளர் சுகத் ரோஹன மற்றும் கலா­சார பணிப்­பாளர் விஜித் கணு­கல ஆகி­யோரை நிய­மித்­துள்ளேன். அவர்கள் அது தொடர்­பான விட­யங்­களை ஆராய்ந்து உயர் விலைக்கு வந்தால் விற்­பனை செய்­வார்கள். அதில் வரும் பணத்­தைக்­கொண்டு வடமேல் மாகா­ணத்தில் வறிய பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாத­ணி­களை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுப்பேன். இதுதான் எனது எண்ணம்.
கேள்வி: எவ்­வா­றான நிறு­வ­னங்கள் உங்­களை அணு­கின?
பதில்:உலகப் பிர­ப­ல­மான ஆப­ர­ணங்­களை சேக­ரிக்கும் நிறு­வ­னங்கள்.
கேள்வி: 1000 மில்­லியன் டொல­ருக்கு பாத­ணி­களை கேட்­ட­னரா?
பதில்: பெரிய விலைக்கு கேட்­டனர். தற்­போது மூவர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­ட­மை­யினால் அவர்கள் இனி அதனை தீர்­மா­னிப்­பார்கள்.
கேள்வி: பாத­ணியின் அடி­க­ழன்ற அந்த சந்­தர்ப்பம் எவ்வாறு இருந்தது? அசெளகரியமாக இருந்ததா?
பதில்: இல்லை. நாங்கள் மண்ணில் காலடி வைத்து வாழ்ந்தவர்கள். குறிப்பாக நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எனவே எனக்கு இது புதிய விடயமல்ல. பாதணி இல்லாமல் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல. நான் இது தொடர்பில் கவலையடையவில்லை. அசெளகரிய மடையவுமில்லை. எனது நிலை குறித்து பெருமையடைகின்றேன். உலகம் என்னை பார்க்கின்றது. 
கேள்வி: அரசாங்கம் ஏதாவது விளக்கம் கோரியதா?
பதில்: ஒரு விளக்கமும் என்னிடம் கோரவில்லை.
கேள்வி:சீனாவின் பக்கத்தில் ஏதாவது கூறப் பட்டதா?
பதில்: ஒன்றும் கூறவில்லை.


கமராக்களுடன் புலனாய்வாளர்கள் களத்தில்!! தொடர்ந்து காணி பறிப்பு! (வீடியோ)


கிளிநொச்சி ஆனையிறவில் தமிழ்மக்களின் பூர்வீக நிலத்தை
இராணுப்படைத்தளம் அமைப்பதற்காக இன்று காலை நிலஅளவை திணைக்களம் அளக்க முயன்றபோது பொது மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது.

குறித்த இடத்திற்கு காணிக்கான உரிமை ஆவணங்களுடன் வந்த காணி உரிமையாளர்களும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரநிதிகளும் அளவீடு செய்வதை தடுத்து நிறுத்த முயன்றபோது அங்கு இராணுவம் மற்றும் காவல்துறை ஆகியன பிரசன்னமாகின.

இந்த நிலையில் இந்தக்காணிகள் காலம்காலமாக தமிழ்மக்கள் வாழ்ந்த நிலம் என்பதை அங்கு வந்த நிலஅளவை அதிகாரிகளுக்கும் இராணுவம் மற்றும் காவல்துறை ஆகியவற்றுக்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் விளக்கமளித்துள்ளனர்.

எனினும் இது மேலிடத்து உத்தரவு என சொல்லி பொலிசாரின் உதவியூடன் அளக்க முற்பட்டபோது காணி உரிமையாளர்கள் மக்கள் மற்றும் பிரதிநிதிகள்இ நிலஅளவையாளர்களையும் அவர்ளுடைய கருவிகளையம் முற்றுகையிட்ட நிலையில் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டது.

காணி உரிமையாளர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்றைய இந்த காணி அபகரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே தவிர இது முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது என்பதற்கு எந்த வித உறுதிப்பாடும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கூடியிருந்த பொதுமக்களையும், வட மாகாண சபை உறுப்பினர்களையும் இராணுவத்தின் புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

உங்கள் எடையை குறைக்க வேண்டுமா ?


உடல் எடை குறைய பல்வேறு விதமான பயிற்ச்சிகளை மக்கள்

செய்து வரும் சூழலில், பயிற்சியுடன் கீழே குறிப்பிட்டுள்ள சரியான உணவுகளை அளவோடு உணவில் சேர்த்து வந்தால் விரைவாக எடை குறையலாம். 
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.
கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.
ஆப்பிள்களில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.
நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளாதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, இரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
சோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.
கத்திரிக்காயைப் போன்றே வெண்டைக்காயும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
சாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.
பீன்ஸ் அனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.
மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால், மிளகாயும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. மேலும் மிளகாயிலும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது

மஹிந்த அரசை கலங்கடிக்க நாளை வெளியாகிறது ஐ.நா வின் வாய்மூல அறிக்கை (இணைப்பு)


மனித உரிமை பேர­வையில் நாளை புதன்­கி­ழமை வெளி­யி­டப்­ப­ட­வுள்ள
இலங்கை மனித உரிமை விவ­காரம் குறித்த விசா­ர­ணைகள் தொடர்­பான வாய்­மூல அறிக்­கையின் முழு­மை­யான விபரம் இங்கே தரப்­ப­டு­கின்­றது,
ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் சார்­பாக நான் இந்த வாய்­மூல அறிக்­கையை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கின்றேன். ‘இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­வித்­தலும் பொறுப்­புக்­கூ­றலும்’ என்ற தலைப்பில் மனித உரிமை பேர­வையில் மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையின் அமை­வாக முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ரணை குறித்தே இந்த வாய்­மூல அறிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.
கண்­கா­ணிப்­பது அவ­சியம்
1.  இந்தப் பிரே­ர­ணை­யா­னது இலங்கை மனித உரிமை நிலை­மை­களை கண்­கா­ணிக்க வேண்­டு­மென்றும் அதனை தொட­ர­வேண்­டு­மென்றும் ஐ.நா.மனித உரிமை அலு­வ­ல­கத்­திற்கு கூறு­கி­றது. அத்­துடன் இரு­த­ரப்­பாலும் யுத்­தத்தின் போது மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கூறப்­படும் பார­தூ­ர­மான மீறல்கள் மற்றும் மனித உரிமை துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக விசா­ரிக்­க­வேண்­டு­மென்றும் இந்தப் பிரே­ரணை கூறு­கின்­றது. 

2. நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவ­னத்­திற்­குட்­ப­டுத்­திய காலப்­ப­கு­திக்கே இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் இது வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இதற்­காக விசேட ஆணை­யா­ளர்­களின் உத­வியும் பெறப்­படும். அத்­துடன் 27 ஆவது அமர்வில் வாய்­மூல அறிக்­கையும் 28ஆவது அமர்வில் விசா­ரணை குறித்த முழு­மை­யான அறிக்­கையை சமர்ப்­பிப்­ப­தற்கும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
பக்­கச்­சார்­பற்ற விசா­ரணை
3. ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் தற்­போது பரந்துபட்ட விசா­ர­ணையை முன்­னெ­டுக்க அர்ப்­ப­ணிப்­பு­மிக்க விசா­ர­ணைக்­கு­ழு­வொன்றை நிறு­வி­யுள்­ளது. இதற்­கான விதி­மு­றைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. எவ்­வாறு சாட்­சி­யங்­களை சமர்ப்­பிக்­க­வேண்­டு­மெ­னவும் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முதல் நிலை­யான தக­வல்­களைப் பெறு­வ­தற்கும் சுயா­தீன மற்றும் பக்கச்சார்­பற்ற விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் விசா­ர­ணைக்­கு­ழு­வா­னது முன்­னு­ரிமை அளிக்­கி­றது. இது மிகவும் சிக்­க­லுக்­கு­ரிய செயற்­பாடு. பல செயற்­பா­டு­களை பல­ சம்­ப­வங்­க­ளையும் வழங்­கப்­பட்­டுள்ள காலத்­திற்குள் விசா­ரிக்­க­வேண்­டி­யுள்­ளது.
இர­க­சி­யத்­தன்மை அவ­சியம்
4. மனித உரிமை அலு­வ­ல­க­மா­னது வெளிப்­ப­டை­யற்­றது என்றும் விசா­ர­ணைக்­கு­ழுவின் தக­வல்­க­ளையும் மூலங்­க­ளையும் வழங்­கு­வ­தில்­லை­யென்றும் இலங்கை ஊட­கங்­களில் தொடர்ச்­சி­யாக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டுவரு­கின்­றன. ஆனால் இந்த இரக­சியத் தன்­மை­யா­னது விசா­ர­ணைக்­கான தக­வல்­களை வழங்­கு­ப­வர்­க­ளையும் விசா­ர­ணையின் ஒருங்­கி­ணைப்­பையும் பேணு­வ­தற்கு மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.
5. மே மாதம் 30 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் ஜெனிவா­வி­லுள்ள இலங்­கை­யின் நிரந்­தர வதி­விட பிர­தி­நி­தியை சந்­தித்து விசா­ர­ணைக்­காக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள செயற்­பா­டு­களை விப­ரித்­த­துடன் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறும் கோரினர்.
பீரி­ஸுடன் சந்­திப்பு
ஜூன்­மாதம் 5 ஆம் திகதி முன்னாள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை விசா­ர­ணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் தொடர்பில் இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல். பீரி­ஸுக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்தார். அர­சாங்கம் விசா­ர­ணைக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கும் என அவர் நம்­பு­வ­தா­கவும் அந்த கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் ஜூன் 10 ஆம் திகதி அறிக்­கை­யொன்றை வெளியிட்­டி­ருந்த ஜெனி­வாவின் வதி­வி­டப்­பி­ர­தி­நிதி இலங்­கையின் குறித்த பிரே­ரணை நிரா­க­ரிப்­ப­தா­கவும் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தில்­லை­யென்றும் திட்­ட­வட்­ட­மாக மனித உரிமை பேர­வைக்கு கூறி­யி­ருந்தார்.
பாரா­ளு­மன்ற பிரே­ரணை
6. ஜூன் 18 ஆம் திகதி இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் விசா­ர­ணையை எதிர்த்து பிரே­ரணை ஒன்றும் நிறை­வேற்­றப்­பட்­டது. இது இலங்­கையின் இறை­மையை மீறு­வ­தாக கூறியே பாரா­ளு­மன்­றத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. எவ்­வா­றெ­னினும் ஒரு எதிர்க்­கட்­சி­யா­னது இதற்கு எதி­ராக வாக்­க­ளித்­த­துடன் சிலர் வாக்­க­ளிப்பில் கலந்து கொள்­ளாமல் இருந்து விட்­டனர்.
வட மாகாண சபை பிரே­ரணை
வட­மா­கா­ண­ச­பையின் மனித உரிமை பேர­வையின் விசா­ர­ணைக்­கான பிரே­ர­ணையை ஆத­ரித்து மூன்று பிரே­ர­ணைகள் ஏப்ரல் மாதம் 28 ஆம்­தி­கதி நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தன.
பீரிஸ் நிரா­க­ரிப்பு
7. ஜூன் மாதம் 5 ஆம் திகதி முன்னாள் மனித உரிமைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் கடி­தத்­திற்கு ஜூலை மாதம் 5 ஆம் திகதி பதி­ல­ளித்­தி­ருந்த இலங்கை வெளிவி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை அர­சாங்கம் இலங்கை தொடர்­பான பிரேரணையை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தா­கவும் இது தொடர்­பான எந்த செயற்­பாட்­டிலும் இலங்கை ஈடு­ப­டாது என்றும் திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருந்தார்.
எவ்­வாறெனினும் எமது அலு­வ­ல­கத்­து­ட­னான தொடர்­புகள் தொடர்ந்தும் பேணப்­படும் என்று கூறி­யி­ருந்தார். விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு இணைப்­பாளர் ஒரு­வரை மனித உரிமை அலு­வ­லகம் நிய­மித்­த­தையும் ஜெனி­வா­வி­லுள்ள இலங்­கையின் வதி­விட அலு­வ­லகம் நிரா­க­ரித்­தி­ருந்­தது. அத்­துடன் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை அலு­வ­லக விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு இலங்கை வர அனு­மதி வழங்­க­மாட்­டாது என்று இலங்கை ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவும் கூறி­யி­ருந்தார்.
நிபு­ணர்கள் நிய­மனம்
8. எவ்­வா­றெ­னினும் பிரே­ர­ணையின் விதி­மு­றைக­ளுக்கு அமை­வாக முன்னாள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை பின்­லாந்தின் முன்னாள் ஜனா­தி­பதி மாட்டின் அத்­தி­சாரி, நியூ­சி­லாந்தின் முன்னாள் ஆளுநர் நாயகம் சில்­வியா காட்ரைட் மற்றும் பாகிஸ்­தானின் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜாங்கீர் ஆகிய நிபு­ணர்­களை விசா­ர­ணைக்கு ஆலோ­சனை வழங்க நிய­மித்­தி­ருந்தார்.
விசேட ஆணை­யா­ளர்­களும் விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு பல வழி­களில் உதவி வரு­கின்­றனர். அவர்­களின் ஒருங்­கி­ணைப்பு மற்றும் சுயா­தீ­னத்­தினைப் பாது­காத்து இந்த செயற்­பாட்­டினை மேற்­கொண்­டுள்­ளனர்.
விசேட ஆணை­யா­ளர்கள் உதவி
9. இந்த நிபு­ணர்கள் உத­வி­யமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணை­யாளர் நன்றி தெரி­விக்­கின்றார். அவர்கள் விசா­ர­ணை­களை நடத்­த­மாட்­டார்கள். ஆனால் விசா­ர­ணைக்கு நிபு­ணத்­துவ ஆலோ­ச­னை­க­ளையும் வழி­காட்­டல்க­ளையும் விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு வழங்­கு­வார்கள். அது­மட்­டு­மன்றி விசா­ர­ணையை சுயா­தீ­ன­மாக உறு­திப்­ப­டுத்­து­வ­தையும் செய்­வார்கள்.
நிபு­ணர்கள் சந்­திப்பு
செப். 6 மற்றும் 7 ஆம் திக­தி­களில் நிபுணர் குழு ஐ.நா. மனித உரிமை விசா­ர­ணைக்­கு­ழு­வுடன் ஜெனி­வாவில் சந்­திப்­புக்­களை நடத்­தி­ய­துடன் விசா­ரணை முறைமை மற்றும் முன்­னேற்­றங்கள் குறித்து மீளாய்வு செய்­தது. அது­மட்­டு­மல்ல ஐ.நா. விசா­ர­ணைக்­கு­ழு­வா­னது விசேட ஆணை­யா­ளர்­க­ளு­டனும் சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருந்­தது.
அர­சாங்­கத்­துக்கு பதில்
10. இந்த இடத்தில் இலங்கை அர­சாங்கம் நேர­டி­யாக முன்­வைத்­துள்ள இரண்டு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பதி­ல­ளிப்­ப­தற்கு மனித உரிமைகள் ஆணை­யாளர் முன்­வந்­துள்ளார். முத­லா­வது குற்­றச்­சாட்­டா­னது இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையில் இராண்­டா­வது பந்தி சுயா­தீ­ன­மான உள்­ளக விசா­ர­ணையைக் கோரு­வ­தா­கவும், 10ஆவது பந்­தி­யா­னது சர்­வ­தேச விசா­ர­ணையைக் கோரு­வ­தா­கவும் எனவே இது முரண்­பா­டா­னது என்றும் தர்க்­கத்தை முன்­வைக்­கின்­றனர். இந்த இடத்தில் எந்­த­வி­த­மான முரண்­பா­டு­களும் இல்லை என்­பதை திட்­ட­வட்­ட­மாக கூறு­கின்றோம்.
நிறை­வேற்­றப்­பட்­டுள்ள மனித உரிமை பேர­வையில் குறிப்­பிட்­டுள்­ள­வாறு இலங்­கை­யா­னது மீறல்கள் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்கு சர்­வ­தேச கடப்­பாட்டைக் கொண்­டுள்­ளது. எவ்­வா­றெ­னினும் இலங்கை அர­சாங்கம் உள்­ளக, நம்­ப­க­மான செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கா­ததை 25ஆவது அமர்வில் சுட்­டிக்­காட்­டு­வ­துடன் அது அத­னு­டைய விசா­ர­ணையை கோரி நிற்­கின்­றது.
இரண்­டா­வது குற்­றச்­சாட்டு
11. இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இரண்­டா­வது தர்க்­க­மா­னது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஐ.நா. விசா­ர­ணைக்­குழு விசா­ரணை நடத்­தப்­போ­கின்­றது என்­ப­தாகும். இது மிக முக்­கி­ய­மான கார­ண­மாகும். ஏனெனில் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வா­னது 2002 ஆம் ஆண்­டுக்கு முன்­ன­தான சம்­ப­வங்கள் தொடர்­பா­கவும் 2009 ஆம் ஆண்­டுக்குப் பின்­ன­ரான சம்­பவம் குறித்தும் விசா­ரணை செய்­தி­ருந்­தது. யுத்த முடிவின் பின்னர் சந்­தேக நபர்கள் தொடர்ந்து தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த விவ­காரம் காணாமல் போதல் என்­பன இதில் உள்­ள­டங்­கு­கின்­றன.
என­வேதான் முன்னாள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை 2009 ஆம் ஆண்டு வரை மட்­டு­மன்றி நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப்­ப­குதி வரை கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்­டு­மென விளக்­க­ம­ளித்­தி­ருந்தார்.
ஆணை­யாளர் கவலை
12. எவ்­வா­றெ­னினும் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தமை தொடர்­பிலும் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­காமை தொடர்­பிலும் மனித உரிமைகள் ஆணை­யாளர் ஆழ­மாக கவ­லை­ய­டை­கிறார். அது­மட்­டு­மன்றி இலங்கை அர­சாங்கம் தன்னை இலங்­கைக்கு வரு­மாறு அழைப்பு விடுத்­துள்­ள­தா­கவும் இம்­மாத இறு­தியில் இலங்­கையின் வெளிவி­வ­கார அமைச்­சரை நியூ­யோர்க்கில் சந்­திக்க எதிர்­பார்த்­துள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.
அரு­மை­யான சந்­தர்ப்பம்
13. யுத்­தத்தின் போது இரண்டு தரப்­புக்­க­ளாலும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக உண்­மையை ஆராய்­வ­தற்கு இது ஒரு தனித்­து­வ­மான வர­லாற்று சந்­தர்ப்­ப­மாகும். இது இலங்கை மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றும். குறிப்­பாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட இரண்டு தரப்பு மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் நிறை­வேற்றும் இந்த செயற்­பா­டா­னது புலிகள் மற்றும் இரா­ணு­வக்­கு­ழுக்­களின் குற்­றங்­க­ளையும் அவர்கள் சிறு­வர்­களை போரா­ளி­க­ளாக இணைத்­துக்­கொண்­ட­மையையும், சிவி­லி­யன்கள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­மையும் ஆராயும். விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­காமல் இருப்­ப­தா­னது அர­சாங்­கத்தின் பெறு­ம­தி­யான தக­வல்­களை கவ­னத்தில் கொள்­வ­தற்கு முடி­யா­மலபோவதற்கு கார­ண­மா­கி­விடும்.
உண்­மையை கண்­ட­றிய உதவும்
14. அது­மட்­டு­மல்ல இது ஆழ­மான உண்­மையை கண்­ட­றியும் செயற்­பாட்­டுக்கும் ஒரு சந்­தர்ப்­பதை வழங்­கு­வ­துடன் இது இலங்­கையின் நிரந்­தர சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்கு பாரிய பங்­க­ளிப்பை வழங்கும். மே மாதம் 18 ஆம் திக­தி­யி­லி­ருந்து 26 ஆம் திகதி வரை ஐக்­கிய நாடுகள் விசேட அறிக்­கை­யாளர் ஒருவர் இலங்­கைக்கு விஜயம் செய்து அவர் குடி­பெயர் தொழி­லா­ளர்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.
15. மேலும் 9 விசேட அறிக்­கை­யா­ளர்கள் இலங்­கைக்கு விஜயம் செய்­வ­தற்கு கோரி­யுள்­ளனர். அவை இன்னும் நிலு­வையில் உள்­ளன. சிறு­பான்மை விவ­காரம், ஒன்­று­கூ­டு­வ­தற்­கான சுதந்­திரம், கருத்து வெளியி­டு­வ­தற்­கான சுதந்­திரம், காணா­மல்­போ­தல்கள், மனித உரிமை காப்­பா­ளர்கள், சுயா­தீன நீதித்­துறை மற்றும் சட்­டத்­த­ர­ணிகள், பெண்­க­ளுக்கு எதி­ரான அநீ­திகள், உண்மை, நீதி உள்­ளிட்ட விட­யங்­களை ஆராய விசேட அறிக்­கை­யா­ளர்களே இலங்கை வரு­வ­தற்கு கோரி­யுள்­ளனர்.
அழை­யுங்கள்
16. நிர்ப்­பந்­தத்தின் பேரில் காணாமல் போனோர் மற்றும் சிறு­பான்மை விவ­கா­ரங்கள் குறித்த விசேட ஆணை­யா­ளர்­களே இலங்­கைக்கு அழைக்­கு­மாறு ஆணை­யாளர் வலி­யு­றுத்­து­கிறார். அர­சாங்கம் இதனை பரி­சீ­லிப்­ப­தா­கவும் இலங்­கையில் காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை முடிந்­ததும் விசேட ஆணை­யா­ளர்­க­ளை­ அழைப்பது குறித்து ஆராய்­வ­தா­கவும் தெரி­வித்­தது.
17. இலங்­கையிய்ன் ஐந்­தா­வது மீளாய்வு அறிக்கை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் பரி­சீ­லிக்­கப்­படும்.
ஆணை­யாளர் அதிர்ச்சி
18. இலங்­கையில் தற்­போது சிவில் சமூக குழுக்கள் மனித உரிமை காப்­பா­ளர்கள், மற்றும் ஐ.நா.விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் குழுக்கள் மீதான அச்­சு­றுத்தல் பிர­சா­ரங்கள் , சித்­தி­ர­வ­தைகள் மற்றும் பழி­வாங்­கல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அதிர்ச்சி அடைந்­துள்ளார். ஐ.நா. மனித உரிமை விசா­ர­ணைக்கு சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தாக இலங்­கையின் ஊடகத்துறை அமைச்சர் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார். அது அர­சியல் அமைப்­பிற்கு எதி­ராக இருந்தால் இவ்­வாறு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அவர் கூறி­யி­ருந்தார். இவ்­வ­ருடம் மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெற்ற மனித உரிமை பேர­வையின் அமர்வில் கலந்து கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மற்றும் சிவில் சமூக உறுப்­பினர்களை கைதுசெய்­யு­மாறு பல அர­சியல் கட்­சிகள், குழுக்கள், கோரிக்கை விடுத்­தி­ருந்­தன.
19. இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்­கான குரல் கொடுப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக வெறுக்கத் தக்க கூற்­றுக்கள் வெளியி­டப்­பட்­டன.
சந்­திப்பு கலைப்பு
20. ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இரா­ஜ­தந்­திர சமூ­கத்­துடன் சிவில் அமைப்­புகள் மேற்­கொண்ட சந்­திப்பு பிக்­கு­மார்கள் உள்­ளிட்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளினால் கலைக்­கப்­பட்­டது. அவர்கள் மோச­மான வார்த்­தைப்­பி­ர­யோ­கங்­களால் விமர்சிக்­கப்­பட்­டனர். பொலிஸார் அந்த இடத்தில் இருந்­தாலும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை அகற்று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. அதனை அடுத்து அறிக்­கை­யொன்றை வெளியிட்ட வெளிவி­வ­கார அமைச்சு, இரா­ஜ­தந்­திர சமூ­க­மா­னது நிகழ்­வு­களில் பங்­கெ­டுக்கும் போது உள்­ளக உணர்வு தொடர்பில் கவனம் செலுத்­த­வேண்­டு­மெனக் கோரி­யி­ருந்­தது.
21. இரண்டு முக்­கிய மனித உரிமை சட்­டத்­த­ர­ணிகள் செப்­டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளினால் அச்­சு­றுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.
16 தமிழ் அமைப்­புக்கள் தடை
22. மார்ச் 22ஆம் திகதி 16 தமிழ் அமைப்­புக்­க­ளையும், 424 தனிப்­பட்­ட­ந­பர்­க­ளையும் தடை­செய்­தி­ருந்­தது. புலி­களை மட்­டு­மல்ல சில தமிழ் புலம்­பெயர் அமைப்­புக்­க­ளையும் தடை செய்­தது. இந்த அமைப்­புக்கள் சர்­வ­தேச பொறி­முறை அமைப்­புக்­க­ளுடன் இணைந்து செயற்­பட்­ட­வைகள். இலங்கை அர­சாங்­கத்­திற்கு பயங்­க­ர­வாதம் மீள் உரு­வா­கு­வதை தடுப்­ப­தற்கு இருக்­கின்ற பொறுப்பை மதிக்­கின்ற மனித உரிமைகள் ஆணை­யாளர் இவை உரிய முறை­களை பின்­பற்ற வேண்­டு­மென்றும் கருத்து வெளியிடும் சுதந்­தி­ரத்­தையும் நல்­லி­ணக்­கத்­திற்­கான முயற்­சி­க­ளையும் பாதிக்க கூடாது என்றும் கரு­து­கிறார்.
அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மீதான செயற்­பா­டுகள்
23. முன்னாள் மனித உரிமைகள் ஆணை­யா­ளரின் இறுதி அறிக்­கைக்குப் பின்னர் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ரான தடை­களும் இதன் ஒரு பகு­தி­யாகும். அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், செய்­தி­யாளர் மாநா­டு­க­ளையும், செய­ல­மர்­வு­க­ளையும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பயிற்­சி­க­ளையும் ஊடக அறிக்கை வெளியி­டு­தல்­க­ளையும் செய்­யக்­கூ­டாது என்று பாது­காப்பு அமைச்­சுக்கு கீழ் வரு­கின்ற அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செய­லகம் சுற்­று­நி­ருபம் ஒன்றை வெ ளியிட்­டி­ருந்­தது. இதனை எதிர்த்த சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொண்­டி­ருந்தார்.
தமிழ் பேசும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய­ல­மர்­வுகள் ஜூன், ஜூலை மாதங்­களில் தடுக்­கப்­பட்­டன.
24. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ர­ணைக்­கு­ழு­வா­னது தக­வல்­களை வழங்­கக்­கூ­டிய சாட்­சி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்கு தேவை­யான பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டு­மென்­பதை உணர்­கின்­றது.
சாட்­சி­களை பாது­காக்கும் சட்­ட­மூலம்
25. இது இலங்­கையில் உள்­ளக விசா­ர­ணை­யிலும் , தாக்­கத்தை செலுத்தும். காரணம் சாட்­சி­யா­ளர்கள் மற்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் நீண்ட கரி­ச­னை ­கா­ணப்­ப­டு­கின்­றது. இலங்கை அர­சாங்கம் சாட்­சி­யா­ளர்­களை பாது­காக்கும் சட்­ட­மூ­லத்தை ஆகஸ்ட் மாதம் பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பித்­தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணை­யாளர் கவனம் செலுத்­தி­யுள்ளார். இந்த சட்­ட­மூல வரை­பா­னது 2006 ஆம் ஆண்­டி­லி­ருந்து தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமை­வாக இந்த சட்­ட­மூ­லத்தை ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் மிகவும் கவ­ன­மாக ஆய்வு செய்து வரு­கி­றது.
எவ்­வா­றெ­னினும் முன்­வைக்­கப்­பட்­டுள்ள சாட்­சி­யா­ளர்­களை பாது­காப்­ப­தற்­கான தேசிய அதி­கார சபை தொடர்பில் பல கவ­னங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. சாட்­சி­யா­ளர்­களை பாது­காக்கும் பிரின் அமை­விடம் பொலிஸ் திணைக்­க­ளத்­திற்குள் வரு­கின்­றமை வெளிநாட்டு அர­சாங்­கங்களின் உத­வி­களை பெற­மு­டி­யாமை என்­பன தொடர்பில் கவனம் எழுப்­பப்­பட்­டுள்­ளன. இந்த விட­யத்தில் மனித உரிமை அலு­வ­லகம் வழங்­கு­வ­தற்கு முன்­வந்த தொழில் நுட்ப உத­விகள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
தேசிய செயற்­றிட்டம் ஆரா­ய­வில்லை
26. இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஊடாக மனித உரிமைப் பேரவை நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­மாறு கோரி­யது. இலங்­கையின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான தேசி­ய­செ­யற்­றிட்டம் உரிய முறையில் விட­யங்­களை ஆரா­ய­வில்லை என்­பது தொடர்பில் கவனம் செலுத்­தி­யுள்­ளது. அது சர்­வ­தேச மனித உரிமை சட்­டங்கள் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை மீறல்கள் குறித்து ஆரா­ய­வில்லை.
30 வீத பரிந்­து­ரைகள்
27. மே மாதம் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ 30 வீத பரிந்­து­ரைகள் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக ஐ.நா. செய­லா­ள­ருக்கு குறிப்­பிட்­டி­ருந்தார். நல்­லி­ணக்­கத்­திற்­கான விசேட பணி­யகம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதில் பரிந்­துரை அமு­லாக்கம் தொடர்­பான இறுதித் திட்டம் இவ்­வ­ருடம் ஜூலை மாதம் பதி­வேற்றம் செய்­யப்­பட்­டது.
28. மும்­மொழி அமு­லாக்­கத்­திற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளன. அரச கரும மொழி திணைக்­கள நிய­மனம் , வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் பொலிஸார் நியனம் என்­ப­வற்றை குறிப்­பி­டலாம். தேசிய ஒற்­றுமை மாநாடு ஏப்ரல் மாதம் நடத்­தப்­பட்­டது.
29. வடக்கு, கிழக்கில் இன்னும் 7840 குடும்­பங்கள் மீள்குடி­யேற்­றப்­ப­ட­வுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. பாதிக்­கப்பட் பகு­தி­களில் கல்வி நட­வ­டிக்­கை­களில் முன்­னேற்றம் அடை­யப்­பட்­டுள்­ளன. வடக்கில் தெரிவு செய்­யப்­பட்ட மாகா­ண­சபை மீள்­கட்­டு­மான செயற்­பா­டு­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் ஈடு­ப­ட­வேண்­டு­மென மனித உரிமை ஆணை­யாளர் ஊக்­கு­விக்­கிறார்.
அலு­வ­லகம் பின்­பற்றும்
30. நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பான முன்­னேற்­றங்­களை ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் தொடர்ச்­சி­யாக நெருக்­க­மாக பின்­பற்றும்
காணாமல் போனோர் குறித்த ஆணைக்­குழு
31. மிக முக்­கி­ய­மான விட­ய­மாக காணாமல் போனோர் விடயம் குறித்து விசா­ரிப்­ப­தற்கு ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வடக்கு,கிழக்கில் காணாமல் போனோர் தொடர்­பாக இந்த ஆணைக்­குழு விசா­ர­ணை­களை நடத்­து­கி­றது. ஆகஸ்ட் மாதம் வரை இந்த ஆணைக்­குழு ஆறு சுற்று அமர்­வு­களை கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, முல்­லைத்­தீவு, மற்றும் மன்னார் பகு­தி­களில் நடத்­தி­யுள்­ளது. வடக்கு கிழக்­கி­லி­ருந்து ஆணைக்­கு­ழு­விற்கு 12,995 க்கும் அதி­க­மான முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. எவ்­வா­றெ­னினும் ஏனைய மாகா­ணங்­க­ளி­லி­ருந்து 374 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இரா­ணுவக் குடும்­பங்­களில் காணா­மல்­போன 5000 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.
கண்­கா­ணிக்­க­வில்லை
32. இந்த ஆணைக்­கு­ழுவின் அமர்­வு­களை ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு கண்­கா­ணிக்­க­வில்லை. இங்கே மொழி­பெ­யர்ப்பு விவ­காரம் எழுப்­பப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான ஆலோ­ச­னைகள் வழங்­கு­வதில் குறை­பா­டுகள், அமர்­வு­களில் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களின் பிரசன்னம், காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்­களின் குடும்­பங்கள் சித்­தி­ர­வதை மற்றும் அழுத்­தங்­க­ளுக்கு பொலி­ஸா­ரினால் உட்­ப­டு­கின்­றமை என்­பன எழுப்­பப்­பட்­டுள்ள விட­யங்கள். காணாமல் போனோரின் குடும்­பங்­க­ளிடம் காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்­கான மரணச் சான்­றி­த­ழைப்­பெற்­றுக்­கொள்­ளு­மாறு பயங்­க­ர­வாதப் புனாய்வுத் திணைக்­க­ளத்­தினர் அழுத்தம் வெ ளியிட்­ட­தாக முல்­லைத்­தீவில் ஜூலை மாதம் இடம்பெற்ற அமர்­வு­களின் போது சாட்­சி­ய­ம­ளிக்­கப்­பட்­டது.
ஆணை விரிவு
33. காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ரிக்கும் ஆணைக்­குவின் ஆணை 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரி­மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஜூலை மாதம் இந்த ஆணைக்­கு­ழுவின் ஆணையை விரி­வு­ப­டுத்­தினார். அதா­வது யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தின் போது இரண்டு தரப்­பி­ன­ராலும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் மீறப்­பட்­ட­னவா என்­பது குறித்தும் புலிகள் பொது­மக்­களை மனித கேட­யங்­க­ளாக பயன்­ப­டுத்­தி­னரா என்­பது குறித்தும் விசா­ரிப்­ப­தற்­காக ஆணை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.
34. அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி ஆறு சர்­வ­தேச நிபு­ணர்­களை ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக அழைப்பு விடுத்திருந்தார். இந்த அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­ட­வரை இந்த சர்­வ­தேச நிபு­ணர்­களின் வகி­பாகம் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆணை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் செயற்­பா­டுகள் மாற்­ற­ம­டை­யுமா? என்­பது குறித்தும் எதுவும் வெளியி­டப்­ப­ட­வில்லை.
முன்­னேற்றம் இல்லை
35. நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைக்கு அமைய இரா­ணுவ நீதி­மன்றம் அமைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டது. எனினும் அதன் அறிக்கை இது­வரை வெளியி­டப்­ப­ட­வில்லை. இரண்­டா­வது கட்ட விசா­ர­ணைகள் தொடர்­பிலும் முன்­னேற்­றங்கள் காணப்­ப­ட­வில்லை.
ஐந்து மாணவர் படு­கொலை
36. 2006 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையில் 5 மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பான விசா­ரணை இது­வரை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை. 17 அரச சார்­பற்ற ஊழி­யர்கள் மூதூரில் 2006 ஆம் ஆண்டு கொலை செய்­யப்­பட்­டமை தொடர்­பாக அர­சாங்கம் பிரான்­ஸுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. எனினும் தற்­போது வெ ளிநாட்­டி­லுள்ள காட்­சி­யா­ளர்­க­ளுடன் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­வது குறித்து இது­வரை உடன்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை என பிரான்ஸ் அறி­வித்­துள்­ளது.
37. வெலி­வே­ரிய சம்­பவம் தொடர்பில் இலங்கை இரா­ணுவம் நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை இன்னும் வெ ளியி­டப்­ப­ட­வில்லை. வவு­னியா மற்றும் வெலிக்­கந்த சிறை­களில் 2012 ஆம் ஆண்டு நடந்த மர­ணங்கள் குறித்த விசா­ர­ணைகள் குறித்தும் வர­வில்லை.
38. இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் அறி­விக்­கப்­பட்ட சித்­தி­ர­வ­தைகள் குறித்த தேசிய விசா­ரணை இது­வரை செயற்­ப­ட­வில்லை.
எம்­லுபுக்­கூடு விவ­காரம்
39. புதிய எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் வெ ளிப்­ப­டுத்­தப்­பட்­டாலும் விசா­ர­ணைகள் தாம­த­மா­கவே இடம் பெற்­றன. மன்­னாரில் 2013 ஆம் ஆண்டின் இறு­திப்­ப­கு­தியில் 80 சடங்­களின் எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.
40. முல்­லைத்­தீ­விலும் மாத்­த­ளை­யிலும் இவ்­வாறு எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. மாத்­த­ளையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. 1980 களில் ஜே.வி.பி. கிளர்ச்­சிக்­கா­லத்­தின்­போ­தா­ன­தாக இருக்­கலாம் என்றும் அவற்றில் வெ ளிநாட்டு இர­சா­யண நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அர­சாங்கம் கூறி­யது.
மனித உரிமை காப்­பா­ளர்கள்
42. தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­களை விடு­விப்­பதில் அர­சாங்கம் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றங்­களை காட்­டி­யுள்­ளது. 2014 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஆகும் போது 114 முன்னாள் போரா­ளிகள் மட்­டுமே புனர்­வாழ்வு நிலை­யங்­களில் உள்­ள­தா­கவும் 84 பேர் சட்ட நட­வ­டிக்­கைக்கு அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழான புதிய கைது சம்­ப­வங்­களும் தடுப்­பு­களும் தொடர்ந்து அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளன. பெப்­ர­வரி மற்றும் மார்ச் மாதங்­களில் சில முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் மீண்டும் புலி அமைப்பை வடக்கில் மீள் உரு­வாக்க செயற்­பட்­ட­தாக அர­சாங்கம் அறி­வித்­தது. பாரிய தேடுதல் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு பெண்கள் உட்­பட 65 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டனர். யுத்த முடிவின் பின்னர் இது மிகப்­பெ­ரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாக இருந்­தது சம்­ப­வங்­களின் மத்­தியில் இது அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யது. சில மனித உரிமை காப்­பா­ளர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.
இரா­ணுவ குறைப்பு
43. வடக்கில் இரா­ணு­வத்­தி­னரை குறைப்­பது தொடர்பில் நல்­லி­ணக்க ஆணைக்­குழு கரி­சனை செலுத்­தி­யி­ருந்­தது. அது­மட்­டு­மன்றி இவ்­வ­ருடம் ஜூலை மாதம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மேஜர் ஜெனரல் ஜி/ ஏ/. சந்­தி­ர­சி­றியை மீண்டும் வடக்கின் ஆளு­ந­ராக நிய­மித்தார். அர­சாங்கம் யுத்­தத்தின் பின்னர் வடக்கில் 35 வீத இரா­ணு­வத்தைக் குறைத்­துள்­ள­தாக அறி­வித்­தி­ருந்­தது.
44. எவ்­வா­றெ­னினும் இரா­ணுவம் தொடர்ந்து தனியார் காணி­களை சுவீ­க­ரிப்­பதை தொடர்­கி­றது. உதா­ர­ண­மாக 6371 தனியார் காணி­களை வலிகாம் வடக்கில் இரா­ணுவம் வைத்­துள்­ளது. 2176 பாதிக்­கப்­பட்ட காணி உரி­மை­யா­ளர்கள் நீதி­மன்­றத்தை நாடி­யுள்­ளனர்.
45. யுத்த முடிவின் பின்னர் பாது­காப்பு அமைச்சின் கீழ் வரு­கின்ற நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை கொழும்பில் பல அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது. 70 ஆயி­ரத்­திற்கும் 1இலட்­சத்து 35 ஆயி­ரத்து உட்­பட்ட குடும்­பங்கள் இட­மாற்­றப்­ப­டலாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த செயற்­பாட்டில் வெளிப்­ப­டைத்­தன்மை மக்கள் ஆலோ­சனைத் தன்மை குறைவு என விமர்ச்­சிக்­கப்­பட்­டுள்­ளது. இவற்றில் அச்­சு­றுத்தல், சித்­தி­ர­வதை என்­ப­னவும் அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது.
முஸ்லிம் சிறு­பான்மை மீதான நட­வ­டிக்­கைகள்
46. ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முன்னாள் ஆணை­யா­ள­ரைப்­போன்றே முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ சிறு­பான்­மை­யி­னத்­துக்கு எதி­ரான மத­வாத நட­வ­டிக்­கைகள் குறித்து கவ­லை­ய­டைந்­துள்ளார். ஜன­வரி மற்றும் ஆகஸ்ட் மாதங்­க­ளுக்­கி­டையில் மத வழிப்­பாட்­டுத்­த­லங்கள் மீதான தாக்­கு­தல்கள், வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்கள், முஸ்­லிம்கள் மீதான வெறுக்­கத்­தக்க வார்த்தைப் பிர­யோ­கங்கள் என்­பன தொடர்பில் 88 முறைப்­பா­டுகள் அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளன. ஜூன் மாதம் அளுத்­க­மவில் இடம்­பெற்ற வன்­மு­றை­களே அண்­மையில் வரலாற்றில் இடம் பெற்ற வெறுக்கத்தக்க வன்முறையாக இருந்தது. பொதுபலசேனாவின் மிகப்பெரிய ஊர்வலத்தை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன. வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதலுக்கு உட்பட்டதாக அறிக்கையிடப்பட்டது. நால்வர் உயிரிழந்ததுடன் 80 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள்
47. சம்பவ இடத்திற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ விஜயம் செய்து இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக விசாரணை செய்வதாகவும் நட்டஈடுகள் வழங்குவதாகவும் உறுதியளித்தார். பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமை தெ ளிவாகியது. வெறுக்கத்தக்க கருத்துக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சட்டமூலம் இன்னும் வரவில்லை. இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான கடும் நடவடிக்கை எடுக்குமாறும் சிறுபான்மை சமூகம் மீதான அரசாங்கத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் மனித உரிமை அலுவலகம் வலியுறுத்துகிறது.
48. ஜனவரிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை சித்திரவதைகள், தனிப்பவர்களுக்கு எதிரான வன்முறைகள், தனிப்பட்டவர்கள் மத குருமார்கள், மதவழிப்பாட்டுத்தலங்கள் தொடர்பாக கிறிஸ்தவ குழுக்கள் அறிக்கை வெ ளியிட்டிருக்கின்றன.
கவனம் தேவை
49. இந்த வாய்மூல அறிக்கையானது ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகளையும் யுத்தத்தின் போதான மீறல்கள் . குறித்த பொறுப்புக்கூறல்மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் மீதும் கவனம் செலுத்துவது முக்கியமானது என்பதை வெளிக்காட்டுகிறது.
50. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் அதன் மூலம் நீண்டகால நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகிறார். காணாமல் போனோரின் ஆணைக்குழுவின் ஆணையை விரிவுபடுத்தியதன் மூலம் அரசாங்கம் உண்மையை கண்டறிவதற்கான பரந்து பட்ட செயற்பாட்டை மேற்கொள்ளும் என அவர் நம்புகிறார்.
ஒத்துழையுங்கள்
51. சிவில் சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவருமாறு மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகிறார். அத்துடன் இலங்கையின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் குறைத்து மதிப்பிடத்தக்க வகையில் இடம்பெறும் முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறார்.
52. இலங்கை மீள்குடியேற்றத்தில் முன்னேற்றத்தை வெ ளிப்படுத்தியிருந்தாலும் நடந்து முடிந்த மற்றும் தற்போது இடம் பெறுகின்ற மீறல்களை ஆராய்வது நல்லிணக்கத்தை அடைவதற்கும் சட்டத்தின் ஆட்சிப்பலப்படுத்துவதற்கும் அவசியம் என்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்துகிறார். இதற்கு மனித உரிமை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணை செயற்பாடானது முக்கிய பங்களிப்பை வழங்கும் என அவர் கருதுகிறார்.
எனவே அனைத்து இலங்கையினரதும் நலனுக்காக ஐ.நா. மனித உரிமை அலுவகத்தின் விசாரணை செயற்பாட்டுடனும் ஐ. நா வின் விசேட . ஆணையாளர்களுடனும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுமாறு இலங்கையிடம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை விடுக்கின்றார்.